திருச்செந்தூர் : முருகப் பெருமான், சூரனை வதம் செய்து, தேவர்களை காத்த நினைவு கூறும் விழாவே கந்தசஷ்டி விழாவாகும். முருகப் பெருமானின் அவதார நோக்கம் நிறைவேறிய தினமாகும். முருகப் பெருமானை, சிக்கலில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியில் மகாகந்தசஷ்டி விழா நடத்தப்படும். கந்தசஷ்டி விரதம் இந்த ஆண்டு நவம்பர் 02ம் தேதி துவங்கி, நவம்பர் 07ம் தேதியான இன்று வரை நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விழா கோலாகமாக நடைபெற்று வந்தது. கோடிக்கணக்கான மக்கள் காப்பு கட்டிக் கொண்டும், வீட்டில் இருந்த படியும் கந்தசஷ்டி விரதம் கடைபிடித்தனர். முருகன், சூரனை வதம் செய்த தலமான திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தும், நேர்த்திக் கடன் செலுத்தியும் வந்தனர்.
நவம்பர் 05ம் தேதி முருகப் பெருமான், அம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதியான இன்று நடைபெற்றது. திருச்செந்தூரில் வெற்றி வேல் தாங்கி வந்த ஜெயந்திநாதரும், வேலும் கடற்கரைக்கு எழுந்தருளிய போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை பிளப்பதாக இருந்தது. சூரனை சம்ஹாரம் செய்த பிறகு உற்சவமூர்த்தியான ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு வள்ளி-தெய்வசேனா சமேத முருகப் பெருமானுக்கு சாயாபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ம் தேதியான நாளை இரவு 11 மணியளவில் திருச்செந்தூரில் முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
திருச்செந்தூர் மட்டுமின்றி, திருத்தணி தவிர மற்ற அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. அதே நேரத்தில் முருகப் பெருமான் சினம் தணிந்து அமர்ந்த திருத்தணியில் முருகப் பெருமானுக்கு 36 டன் பலவிதமான மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
{{comments.comment}}