Soorasamharam 2024.. அரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருச்செந்தூரில் சூரசம்ஹார கோலாகலம்

Nov 07, 2024,06:28 PM IST

திருச்செந்தூர் : முருகப் பெருமான், சூரனை வதம் செய்து, தேவர்களை காத்த நினைவு கூறும் விழாவே கந்தசஷ்டி விழாவாகும். முருகப் பெருமானின் அவதார நோக்கம் நிறைவேறிய தினமாகும். முருகப் பெருமானை, சிக்கலில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார்.


ஆண்டுதோறும் ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியில் மகாகந்தசஷ்டி விழா நடத்தப்படும். கந்தசஷ்டி விரதம் இந்த ஆண்டு நவம்பர் 02ம் தேதி துவங்கி, நவம்பர் 07ம் தேதியான இன்று வரை நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விழா கோலாகமாக நடைபெற்று வந்தது. கோடிக்கணக்கான மக்கள் காப்பு கட்டிக் கொண்டும், வீட்டில் இருந்த படியும் கந்தசஷ்டி விரதம் கடைபிடித்தனர். முருகன், சூரனை வதம் செய்த தலமான திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தும், நேர்த்திக் கடன் செலுத்தியும் வந்தனர்.




நவம்பர் 05ம் தேதி முருகப் பெருமான், அம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதியான இன்று நடைபெற்றது. திருச்செந்தூரில் வெற்றி வேல் தாங்கி வந்த ஜெயந்திநாதரும், வேலும் கடற்கரைக்கு எழுந்தருளிய போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை பிளப்பதாக இருந்தது. சூரனை சம்ஹாரம் செய்த பிறகு உற்சவமூர்த்தியான ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு வள்ளி-தெய்வசேனா சமேத முருகப் பெருமானுக்கு சாயாபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ம் தேதியான நாளை இரவு 11 மணியளவில் திருச்செந்தூரில் முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.


திருச்செந்தூர் மட்டுமின்றி, திருத்தணி தவிர மற்ற அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. அதே நேரத்தில் முருகப் பெருமான் சினம் தணிந்து அமர்ந்த திருத்தணியில் முருகப் பெருமானுக்கு 36 டன் பலவிதமான மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!

news

நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்

news

நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி

news

பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு

news

யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது

news

விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!

news

தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்