சென்னை : வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சிகளை போல் இல்லாமல் பல எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை கொண்டு செல்ல நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்து, 7 வது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. வழக்கமாக ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படும். ஆனால் கொரோனாவிற்கு பிறகு அதில் தாமதமாகவே துவங்கப்பட்டு வருகிறது. தற்போது 7 வது சீசன் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 6 சீசன்களை போலவே 7வது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க போகிறார்.
7வது சீசனை தொகுத்து வழங்குவதற்காக கமலுக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது போட்டியாளர்களுக்கான ஆடிசன் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. பிரபல செய்தி வாசிப்பாளர் உள்ளிட்ட பலரும் இந்த முறை போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிறார்கள் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, இந்த சீசனில் புதிய ட்விஸ்ட் ஒன்றை அறிமுகம் செய்ய பிக்பாஸ் டீம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடுகள் அமைக்கப்பட உள்ளதாம். போட்டியாளர்கள் இரு அணியாக பிரிக்கப்பட்டு, இந்த இரண்டு வீடுகளிலும் தங்க வைக்கப்பட உள்ளார்களாம். சில நாட்கள் கடந்த பிறகு அனைவரும் ஒரே வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள்.
அதேபோல இரண்டு வீடுகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 76 கேமராக்கள் வைக்கப்படவுள்ளதாம். இதற்கு முன்பு 65 கேமராக்கள் வைக்கப்பட்டிருந்ததாம். வீடு இரண்டாகியுள்ளதால், கேமராக்களும் அதிகரிக்கிறதாம். மேலும் சில பரபரப்பான பிரபலங்களையும் வீட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாம். அதில் ரேகா நாயரின் பெயர் லிஸ்ட்டில் இருக்கிறதாம். இவருக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே நடந்த மோதல் உலகம் அறிந்தது. பயில்வான் ரங்கநாதனையும் கூட உள்ளே கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதாம்.
உமா ரியாஸ் கான், பாவனா , மாகாபா என பல விஜய் டிவி பிரபலங்களும் ஹவுஸ்மேட் பட்டியலில் உள்ளார்களாம். இது போல் இன்னும் பல ட்விஸ்ட்களை வைத்து இந்த சீசனை செம ஹிட்டாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}