சென்னை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சில நாட்களுக்கு முன்பு அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து தீர்த்தது. தற்போது வடக்கில் மழை அடங்கியுள்ளது. அதேசமயம், மன்னார் வளைகுடாவில் மேகக் கூட்டங்கள் திரண்டு வியாபித்து நிற்பதால், தென் மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவு:

மன்னார் வளைகுடாவில் மேகக் கூட்டங்கள் திரண்டு நிற்கின்றன. இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் இந்த சீசனின் முதல் பெரிய மழை பெய்யும்.
அதேபோல நாகப்பட்டனம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரவலாக மழைக்கு வாய்ப்புண்டு.
சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் நாளை முதல் மழையை எதிர்பார்க்கலாம். அடுத்த 15 நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமானவை. வெயில் அடிக்கும், திடீரென மழை பெய்யும்.. எனவே இந்தப் பகுதிகளில் வசிப்போர், வெயில் அடிக்குதேன்னு அப்படியே வெளியில் போயிராதீங்க.. கையில் குடையும், ரெயின்கோட்டும் இருக்கட்டும்.
இதேபோல தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்களிலும் நாளை முதல் அவ்வப்போது மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}