சென்னை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சில நாட்களுக்கு முன்பு அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து தீர்த்தது. தற்போது வடக்கில் மழை அடங்கியுள்ளது. அதேசமயம், மன்னார் வளைகுடாவில் மேகக் கூட்டங்கள் திரண்டு வியாபித்து நிற்பதால், தென் மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவு:

மன்னார் வளைகுடாவில் மேகக் கூட்டங்கள் திரண்டு நிற்கின்றன. இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் இந்த சீசனின் முதல் பெரிய மழை பெய்யும்.
அதேபோல நாகப்பட்டனம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரவலாக மழைக்கு வாய்ப்புண்டு.
சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் நாளை முதல் மழையை எதிர்பார்க்கலாம். அடுத்த 15 நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமானவை. வெயில் அடிக்கும், திடீரென மழை பெய்யும்.. எனவே இந்தப் பகுதிகளில் வசிப்போர், வெயில் அடிக்குதேன்னு அப்படியே வெளியில் போயிராதீங்க.. கையில் குடையும், ரெயின்கோட்டும் இருக்கட்டும்.
இதேபோல தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்களிலும் நாளை முதல் அவ்வப்போது மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}