சென்னை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சில நாட்களுக்கு முன்பு அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து தீர்த்தது. தற்போது வடக்கில் மழை அடங்கியுள்ளது. அதேசமயம், மன்னார் வளைகுடாவில் மேகக் கூட்டங்கள் திரண்டு வியாபித்து நிற்பதால், தென் மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவு:

மன்னார் வளைகுடாவில் மேகக் கூட்டங்கள் திரண்டு நிற்கின்றன. இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் இந்த சீசனின் முதல் பெரிய மழை பெய்யும்.
அதேபோல நாகப்பட்டனம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரவலாக மழைக்கு வாய்ப்புண்டு.
சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் நாளை முதல் மழையை எதிர்பார்க்கலாம். அடுத்த 15 நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமானவை. வெயில் அடிக்கும், திடீரென மழை பெய்யும்.. எனவே இந்தப் பகுதிகளில் வசிப்போர், வெயில் அடிக்குதேன்னு அப்படியே வெளியில் போயிராதீங்க.. கையில் குடையும், ரெயின்கோட்டும் இருக்கட்டும்.
இதேபோல தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்களிலும் நாளை முதல் அவ்வப்போது மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}