சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை 8 நாட்கள் முன்கூட்டியே துவங்கியதாகந அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். இந்த பருவ மழை அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். அதன் பிறகு வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும். தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவு காணப்படும்.ஆனால் இந்த வருடம் தமிழகத்தில் அதிக மழை கிடைத்துள்ளது.
அதாவது தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 10 நாட்கள் முன்கூட்டியே மே 25 ஆம் தேதி வாக்கில் தொடங்கப்படும். அதேபோல் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, மே 27 ஆம் தேதிக்கு முன்னதாகவே தொடங்கும். கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனால் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அதிகப்படியான மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே காற்று சுழற்சி காரணமாக, கோடை மழை கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 19 வரை தமிழ்நாட்டில் 192.7 மிமீ மழை பெய்துள்ளது. இது கோடை காலத்தில் பெய்யும் சராசரி மழையான 101.4 மிமீ மழையை விட கிட்டத்தட்ட 90% அதிகமாகும். அதே நேரத்தில் அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க கூடும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கேரளாவில் தொடங்கி நாடு முழுவதும் ஜூலை முதல் வாரத்தில் முழுமையாக பரவ கூடும் நாட்டின் 80 சதவிகித மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் வெயில் சற்று தணிந்து சிலு சிலு என்ற காற்றுடன் குளுமையான சூழலில் நிலவு வருகிறது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}