மாட்ரிட்: தெருவில் நிர்வாணமாக நடக்க உரிமை உண்டு என்று கூறி ஸ்பெயின் நாட்டு கோர்ட் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா பகுதியைச் சேர்ந்தவர் அலெஜான்ட்ரோ கொலோமார். 29 வயதாகும் இவர் அலடெயா நகரில் நிர்வாணமாக நடந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் அலெஜான்ட்ரோ. கோர்ட் விசாரணைக்கும் கூட அவர் நிர்வாணமாகவே வந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட், அலெஜான்ட்ரோ நிர்வாணமாக 2 தெருக்களில் நடந்துள்ளார். அவரது நிர்வாண நடையால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பாலியல் நோக்கத்துடன் அவர் நடக்கவும் இல்லை. எனவே இந்த அபராதம் பொருந்தாது என்று தீர்ப்பளித்தது. அதேசமயம், நிர்வாண நடை தொடர்பான சட்டத்தில் இன்னும் கூடுதல் வலிமை தேவை என்றும் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பதை ஸ்பெயின் நாடு 1988ம் ஆண்டு சட்டப்பூர்வமாக்கியது. யார் வேண்டுமானாலும் தெருவில் நிர்வாணமாக நடக்கலாம். இருப்பினும் பார்சிலோனா, வெல்லடாலிட் உள்ளிட்ட சில பகுதிகளில் பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. கடற்கரை பகுதிகளில் மட்டுமே இங்கெல்லாம் நிர்வாணமாக நடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
{{comments.comment}}