மாட்ரிட்: தெருவில் நிர்வாணமாக நடக்க உரிமை உண்டு என்று கூறி ஸ்பெயின் நாட்டு கோர்ட் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா பகுதியைச் சேர்ந்தவர் அலெஜான்ட்ரோ கொலோமார். 29 வயதாகும் இவர் அலடெயா நகரில் நிர்வாணமாக நடந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் அலெஜான்ட்ரோ. கோர்ட் விசாரணைக்கும் கூட அவர் நிர்வாணமாகவே வந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட், அலெஜான்ட்ரோ நிர்வாணமாக 2 தெருக்களில் நடந்துள்ளார். அவரது நிர்வாண நடையால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பாலியல் நோக்கத்துடன் அவர் நடக்கவும் இல்லை. எனவே இந்த அபராதம் பொருந்தாது என்று தீர்ப்பளித்தது. அதேசமயம், நிர்வாண நடை தொடர்பான சட்டத்தில் இன்னும் கூடுதல் வலிமை தேவை என்றும் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பதை ஸ்பெயின் நாடு 1988ம் ஆண்டு சட்டப்பூர்வமாக்கியது. யார் வேண்டுமானாலும் தெருவில் நிர்வாணமாக நடக்கலாம். இருப்பினும் பார்சிலோனா, வெல்லடாலிட் உள்ளிட்ட சில பகுதிகளில் பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. கடற்கரை பகுதிகளில் மட்டுமே இங்கெல்லாம் நிர்வாணமாக நடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}