லோக்சபா தேர்தலை முன்னிட்டு.. இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

Apr 18, 2024,06:46 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நேற்று போலவே இன்றும் தமிழ்நாடு முழுவதும் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளில் இருந்து 807 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு, மொத்தம் 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் சுமார் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


இதனைத் தொடர்ந்து இன்றும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கும், சிரமம் இல்லாமல் பயணித்து தங்களின் வாக்குகளை செலுத்த ஏதுவாக தமிழக அரசு

சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.




அதன்படி தமிழக முழுவதும் 10 ஆயிரத்து 214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட 777 பேருந்துகள் உட்பட மொத்தம் 2,692 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


இதுவரை சென்னையிலிருந்து 17,000 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 30,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.


21ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கம்:


வாக்களித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பும் வகையில் ஏப்ரல் 21ஆம் தேதி 24,000 மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.


மேலும் tnstc செயலி மற்றும் www. tnstc.in என்ற இணையதளம் வாயிலாக முன் பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்