சென்னை: தாம்பரம்- திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரயில் பொங்கலையொட்டி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலை, படிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் சொந்த ஊரை விட்டு சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.
சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குத்தான் அதிக அளவிலான மக்கள் ஒவ்வொரு பண்டிகையின்போதும் செல்வது வழக்கம். அனைவரும் பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறையின் போதும் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். அதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போது சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து, சிறப்பு விமானம் என பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்படும்.

இந்த சிறப்பு வசதிகளினால் கூட்டம் நெரிசல் குறைந்து, சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நிம்மதியாக சென்று வருகின்றனர். அந்த வகையில், வருகிற பெங்கல் பண்டிகைக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதில் ஒரு ரயிலானது திருச்சியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருச்சியில் இருந்து தாம்பரம் இடையே ஜன் சதாப்தி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் 06190 திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலானது திருச்சியில் காலை 5.35 மணிக்கு கிளம்பி தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலானது ஜனவரி 4,5,10,11,12,13,17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் மறு மார்க்கமாக தாம்பரத்தில் இருந்து மாலை 03.50க்கு கிளம்பி திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு சென்றடையும். ஜனவரி 4,5,10,11,12,13,17,18, மற்றும் 19ம் தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பத்ரிப்புலியூர், பன்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}