சென்னை: தாம்பரம்- திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரயில் பொங்கலையொட்டி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலை, படிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் சொந்த ஊரை விட்டு சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.
சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குத்தான் அதிக அளவிலான மக்கள் ஒவ்வொரு பண்டிகையின்போதும் செல்வது வழக்கம். அனைவரும் பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறையின் போதும் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். அதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போது சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து, சிறப்பு விமானம் என பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்படும்.

இந்த சிறப்பு வசதிகளினால் கூட்டம் நெரிசல் குறைந்து, சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நிம்மதியாக சென்று வருகின்றனர். அந்த வகையில், வருகிற பெங்கல் பண்டிகைக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதில் ஒரு ரயிலானது திருச்சியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருச்சியில் இருந்து தாம்பரம் இடையே ஜன் சதாப்தி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் 06190 திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலானது திருச்சியில் காலை 5.35 மணிக்கு கிளம்பி தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலானது ஜனவரி 4,5,10,11,12,13,17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் மறு மார்க்கமாக தாம்பரத்தில் இருந்து மாலை 03.50க்கு கிளம்பி திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு சென்றடையும். ஜனவரி 4,5,10,11,12,13,17,18, மற்றும் 19ம் தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பத்ரிப்புலியூர், பன்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}