சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 10ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் வேலை படிப்பு காரணங்களுக்காக தங்கியிருப்பவர்கள் தங்கம் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அதனை ஒட்டி ரயில், பேருந்து, விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இதனை சரி செய்யும் விதமாக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அதன்படி, தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெங்களூரு- சென்னை
ஜனவரி 10ம் தேதி 07319 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட பிற்பகல் 2.40க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தை அடையும். அன்றைய தினமே சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் 07320 என்ற எண் கொண்ட ரயில் இரவு 10.50க்கு பெங்களூருவை சென்றடையும்.
பெங்களூரு-தூத்துக்குடி
ஜனவரி 10ம் தேதி 06569 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜனவரி 11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். அதே ரயில் மறுமார்க்கமாக சனிக்கிழமை பிற்பகல் 1மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மைசூரு வரை செல்லும்.
எர்ணாகுளம்-சென்னை
ஜனவரி 19ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6.15க்கு புறப்படும் 06046 என்ற எண் கொண்ட ரயில் மறுநாள் ஜனவரி 17ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கமாக ஜனவரி 17ம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 06047 என்ற எண் கொண்ட ரயில் இரவு 1 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
திருவனந்தபுரம்-சென்னை
ஜனவரி 15ம் தேதி திருனவந்தபுரத்தில் இருந்து காலை 4.25க்கு புறப்படும் 06058 என்ற எண் கொண்ட ரயில் இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 06047 என்ற எண் கொண்ட ரயில் இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
{{comments.comment}}