சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 10ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் வேலை படிப்பு காரணங்களுக்காக தங்கியிருப்பவர்கள் தங்கம் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அதனை ஒட்டி ரயில், பேருந்து, விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இதனை சரி செய்யும் விதமாக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அதன்படி, தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெங்களூரு- சென்னை
ஜனவரி 10ம் தேதி 07319 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட பிற்பகல் 2.40க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தை அடையும். அன்றைய தினமே சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் 07320 என்ற எண் கொண்ட ரயில் இரவு 10.50க்கு பெங்களூருவை சென்றடையும்.
பெங்களூரு-தூத்துக்குடி
ஜனவரி 10ம் தேதி 06569 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜனவரி 11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். அதே ரயில் மறுமார்க்கமாக சனிக்கிழமை பிற்பகல் 1மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மைசூரு வரை செல்லும்.
எர்ணாகுளம்-சென்னை
ஜனவரி 19ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6.15க்கு புறப்படும் 06046 என்ற எண் கொண்ட ரயில் மறுநாள் ஜனவரி 17ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கமாக ஜனவரி 17ம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 06047 என்ற எண் கொண்ட ரயில் இரவு 1 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
திருவனந்தபுரம்-சென்னை
ஜனவரி 15ம் தேதி திருனவந்தபுரத்தில் இருந்து காலை 4.25க்கு புறப்படும் 06058 என்ற எண் கொண்ட ரயில் இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 06047 என்ற எண் கொண்ட ரயில் இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் விபரீதம்.. 3 பேருக்கு ஏற்பட்ட கதி.. பரபரப்பு சம்பவம்!
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
தொடர்ந்து மக்களை புலம்ப வைத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
சந்தோஷம்!
{{comments.comment}}