சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட அளவிலான தமிழ் வளர்ச்சி துறை போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. பேச்சுப்போட்டியில் மாணவி மா.ரித்திகா சிவகங்கை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இந்த மாணவிக்கு சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி ரூபாய் 10,000 பரிசுக்கான காசோலையும் ,பாராட்டு சான்றிதழும் வழங்கினார். சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவியாளர் செந்தில்குமார், அலுவலக உதவியாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தார்.
மாவட்ட அளவில் உயர்நிலை,மேல்நிலை,நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பலர் பங்கேற்றனர். வெற்ற பெற்ற மாணவி ரித்திகா மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது பாராட்டத்தக்கது.
பரிசு பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, முத்துமீனாள் , ஸ்ரீதர் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர். மாணவ மாணவியர்களும் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி
வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!
21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!
பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!
Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
{{comments.comment}}