சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட அளவிலான தமிழ் வளர்ச்சி துறை போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. பேச்சுப்போட்டியில் மாணவி மா.ரித்திகா சிவகங்கை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

இந்த மாணவிக்கு சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி ரூபாய் 10,000 பரிசுக்கான காசோலையும் ,பாராட்டு சான்றிதழும் வழங்கினார். சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவியாளர் செந்தில்குமார், அலுவலக உதவியாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தார்.
மாவட்ட அளவில் உயர்நிலை,மேல்நிலை,நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பலர் பங்கேற்றனர். வெற்ற பெற்ற மாணவி ரித்திகா மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது பாராட்டத்தக்கது.
பரிசு பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, முத்துமீனாள் , ஸ்ரீதர் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர். மாணவ மாணவியர்களும் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
தைப்பூசமும் வள்ளலாரும்.. உணர்த்தும் அருட் பெரும் செய்தி!
நீதி சொல்ல இத்தனை நூல்களா.. தமிழின் தனிப்பெருமை.. உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
{{comments.comment}}