புறா காலில் கேமரா.. ராஜா காலத்து டெக்னிக்கை பயன்படுத்தி வேவு பார்த்த உளவாளிகள்!

Mar 09, 2023,04:46 PM IST
பாரதிப் : புறாவின் காலில் கேமிரா,  மைக்ரோசிப் ஆகியவற்றை பொறுத்தி அதன் மூலம் புதுவிதமாக உளவாளிகள் உளவு பார்த்து வந்துள்ள சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. 

ஒடிசாவின் ஜகத்சிங்கபூர் மாவட்டம் பாரதிப் பகுதியில் மீனவ படகு ஒன்றில் புறா ஒன்று வந்து அமர்ந்துள்ளது. அதன் காலில் ஏதோ வித்தியாசமாக இருப்பதையும், அதன் சிறகுகளில் ஏதோ எழுதப்பட்டிருப்பதையும் கண்ட மீனவர்கள், அந்த புறாவை பிடித்து கடற்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

அந்த புறாவின் காலில் பொருத்தப்பட்டுள்ளது எந்த வகையான டிவைஸ் என்பதை கண்டறிய தடய அறிவியல் துறையின் உதவி கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. புறாவின் காலில் கேமரா மற்றும் மைக்ரோ சிப் இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் சிறகில் உள்ளூர் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத வகையில் வித்தியாசமான மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. 




புறாவின் சிறகுகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை படிக்கவும் நிபுணர்களிடம் உதவி கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கோர்க் கடற்கரை சுற்றுவட்டாரத்தில் கடந்த 10 நாட்களாக 35 கி.மீ., வரை இந்த புறா பறந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புறாவை அனுப்பி, உளவு பார்த்தது யார், எதற்காக உளவு பார்க்கப்பட்டது என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளா அல்லது சீனாவிலிருந்து இந்த உளவுப் புறா அனுப்பப்பட்டதா என்பதை அறியும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்