புறா காலில் கேமரா.. ராஜா காலத்து டெக்னிக்கை பயன்படுத்தி வேவு பார்த்த உளவாளிகள்!

Mar 09, 2023,04:46 PM IST
பாரதிப் : புறாவின் காலில் கேமிரா,  மைக்ரோசிப் ஆகியவற்றை பொறுத்தி அதன் மூலம் புதுவிதமாக உளவாளிகள் உளவு பார்த்து வந்துள்ள சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. 

ஒடிசாவின் ஜகத்சிங்கபூர் மாவட்டம் பாரதிப் பகுதியில் மீனவ படகு ஒன்றில் புறா ஒன்று வந்து அமர்ந்துள்ளது. அதன் காலில் ஏதோ வித்தியாசமாக இருப்பதையும், அதன் சிறகுகளில் ஏதோ எழுதப்பட்டிருப்பதையும் கண்ட மீனவர்கள், அந்த புறாவை பிடித்து கடற்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

அந்த புறாவின் காலில் பொருத்தப்பட்டுள்ளது எந்த வகையான டிவைஸ் என்பதை கண்டறிய தடய அறிவியல் துறையின் உதவி கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. புறாவின் காலில் கேமரா மற்றும் மைக்ரோ சிப் இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் சிறகில் உள்ளூர் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத வகையில் வித்தியாசமான மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. 




புறாவின் சிறகுகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை படிக்கவும் நிபுணர்களிடம் உதவி கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கோர்க் கடற்கரை சுற்றுவட்டாரத்தில் கடந்த 10 நாட்களாக 35 கி.மீ., வரை இந்த புறா பறந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புறாவை அனுப்பி, உளவு பார்த்தது யார், எதற்காக உளவு பார்க்கப்பட்டது என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளா அல்லது சீனாவிலிருந்து இந்த உளவுப் புறா அனுப்பப்பட்டதா என்பதை அறியும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்