புறா காலில் கேமரா.. ராஜா காலத்து டெக்னிக்கை பயன்படுத்தி வேவு பார்த்த உளவாளிகள்!

Mar 09, 2023,04:46 PM IST
பாரதிப் : புறாவின் காலில் கேமிரா,  மைக்ரோசிப் ஆகியவற்றை பொறுத்தி அதன் மூலம் புதுவிதமாக உளவாளிகள் உளவு பார்த்து வந்துள்ள சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. 

ஒடிசாவின் ஜகத்சிங்கபூர் மாவட்டம் பாரதிப் பகுதியில் மீனவ படகு ஒன்றில் புறா ஒன்று வந்து அமர்ந்துள்ளது. அதன் காலில் ஏதோ வித்தியாசமாக இருப்பதையும், அதன் சிறகுகளில் ஏதோ எழுதப்பட்டிருப்பதையும் கண்ட மீனவர்கள், அந்த புறாவை பிடித்து கடற்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

அந்த புறாவின் காலில் பொருத்தப்பட்டுள்ளது எந்த வகையான டிவைஸ் என்பதை கண்டறிய தடய அறிவியல் துறையின் உதவி கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. புறாவின் காலில் கேமரா மற்றும் மைக்ரோ சிப் இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் சிறகில் உள்ளூர் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத வகையில் வித்தியாசமான மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. 




புறாவின் சிறகுகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை படிக்கவும் நிபுணர்களிடம் உதவி கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கோர்க் கடற்கரை சுற்றுவட்டாரத்தில் கடந்த 10 நாட்களாக 35 கி.மீ., வரை இந்த புறா பறந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புறாவை அனுப்பி, உளவு பார்த்தது யார், எதற்காக உளவு பார்க்கப்பட்டது என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளா அல்லது சீனாவிலிருந்து இந்த உளவுப் புறா அனுப்பப்பட்டதா என்பதை அறியும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்