கொழும்பு: இலங்கை தற்காலிக பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரியா, முழு நேர பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அமைச்சரவையில் 24 கேபினட் அமைச்சர்களையும் ஜனாதிபதி அனுரா குமார திசநாயகே நியமித்துள்ளார். அதிபர் அனுரா, பாதுகாப்புத்துறையை தன் வசமே வைத்துக் கொண்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், அனுரா குமார திசநாயகே அபார வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இடைக்கால பிரதமராக டாக்டர் ஹரினி அமரசூரியா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அனுரா திசநாயகேவின் கூட்டணி அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெற்றது. பிரதமராக ஹரினி அமரசூரியா, ஜனாதிபதி அனுரா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். அதேபோல 24 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பிரதமர் ஹரினி, கல்வித்துறை, உயர் கல்வித்துறை மற்றும் வெக்கேஷனல் பயிற்சி ஆகிய துறைகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து அது அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. ஆளுங்கட்சி சார்பில் 13 தமிழர்கள் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 28 தமிழர்கள் எம்.பிக்களாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}