கொழும்பு: இலங்கை தற்காலிக பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரியா, முழு நேர பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அமைச்சரவையில் 24 கேபினட் அமைச்சர்களையும் ஜனாதிபதி அனுரா குமார திசநாயகே நியமித்துள்ளார். அதிபர் அனுரா, பாதுகாப்புத்துறையை தன் வசமே வைத்துக் கொண்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், அனுரா குமார திசநாயகே அபார வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இடைக்கால பிரதமராக டாக்டர் ஹரினி அமரசூரியா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அனுரா திசநாயகேவின் கூட்டணி அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெற்றது. பிரதமராக ஹரினி அமரசூரியா, ஜனாதிபதி அனுரா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். அதேபோல 24 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பிரதமர் ஹரினி, கல்வித்துறை, உயர் கல்வித்துறை மற்றும் வெக்கேஷனல் பயிற்சி ஆகிய துறைகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து அது அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. ஆளுங்கட்சி சார்பில் 13 தமிழர்கள் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 28 தமிழர்கள் எம்.பிக்களாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
{{comments.comment}}