Happy News: ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட பெண்ணுக்கு.. அழகான ஆண் குழந்தை பிறந்தது!

Dec 20, 2023,10:35 AM IST
மதுரை: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவித்துக் கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி அனுசுயா மயில், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஆட்டிப் பார்த்து விட்ட வெள்ளம் மற்றும் கன மழையின் பாதிப்பிலிருந்து வெளியே வர பல நாட்களாகும். இந்த பரபரப்பான தருணங்களில் யாராலும் மறக்க முடியாதது, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக் கொண்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்தான்.

கிட்டத்தட்ட 3 நாட்கள் அந்த ரயில் ஒரே இடத்திலேயே நின்றிருந்தது. எந்தப் பக்கமும் நகர முடியாத நிலையில் சிக்கிக் கொண்ட ரயிலில் 800 பயணிகள் பரிதவித்தனர். 300 பேர் வேகமாக மீட்கப்பட்ட நிலையில் வெள்ளம் அதிகரித்து விட்டதால் மற்றவர்களை மீட்க முடியாத நிலை. நேற்றுதான் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.



நேற்று காலை அனுசுயா மயில் உள்ளிட்ட 4 பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இதில் அனுசுயா மயில், நிறைமாத கர்ப்பிணி ஆவார். பத்திரமாக மீட்கப்பட்ட அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அவருக்கு விமான நிலையத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரை மதுரை அரசினர் ராஜாஜி பொது மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுசுயா மயிலை பத்திரமாக மீட்டு, அவருக்கு பிரச்சினை இல்லாமல் பிரசவம் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்திலிருந்து மீண்டு அழகான பிள்ளையைப் பெற்றெடுத்த இந்த மகளையும், அந்த செல்வத்தையும் நெஞ்சார வாழ்த்துவோம்.

சமீபத்திய செய்திகள்

news

சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்