ஸ்ரீவைகுண்டம்  ரயில் நிலையத்தில் சிக்கி உள்ள.. பயணிகளை.. மீட்கும் முயற்சிகள் தீவிரம்

Dec 19, 2023,04:39 PM IST

- மஞ்சுளா தேவி


ஸ்ரீவைகுண்டம்: தொடர் கனமழையால் ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில், ரயிலில் மூன்றாவது நாளாக சிக்கித் தவிக்கும் பணிகளை விமானப்படை உதவியுடன் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.


திருச்செந்தூரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. கன மழை கொட்டி தீர்த்த வேளையில் இரவு 9 மணி அளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீ வைகுண்டம் அருகே நிறுத்தப்பட்டது. இங்கு மண்ணரிப்பு ஏற்பட்டதால் ரயில்வே பாலம் சேதம் அடைந்தது. இதனால் ரயிலை இயக்க முடியவில்லை. தொடர் கனமழையால் ரயில் நிலையம் முழுவதும் பத்தடி வரை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.


தகவல் அறிந்த மீட்பு படையினர் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட 800 பேரில்  300 பேர் மட்டும் மீட்டு அவர்களை அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் தண்ணீர் அதிகரித்ததால் மற்ற 500 பேரை மீட்க முடியவில்லை. மீதம் உள்ளவர்கள் விமானப்படை மூலம் நாளை மீட்கப்படுவார் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று அறிவித்திருந்தார்.




இந்நிலையில் இன்று காலை மீட்புப் படையினர் 8 .50 மணி அளவில் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தனர். காலை 10 மணி அளவில் கர்ப்பிணி உட்பட மேலும் 4 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். விமானப்படையின் மூலம் ரயில் நிலையத்தில் சிக்கி உள்ள பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இருப்பினும் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. முதற்கட்டமாக 100 ரயில் பயணிகள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களை 3 கிமீ தூரம் நடந்தே, வெள்ளூருக்கு  அழைத்து வந்தனர். அங்கிருந்து பஸ்கள் மூலம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 


பின்னர் இந்தப் பயணிகளை, சென்னை வரை செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரயில் நிலையப் பயணிகளை மீட்கும் பணிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலமாக கண்காணித்து ரயில்வே அதிகாரிகளை முடுக்கி விட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்