ஸ்ரீவைகுண்டம்  ரயில் நிலையத்தில் சிக்கி உள்ள.. பயணிகளை.. மீட்கும் முயற்சிகள் தீவிரம்

Dec 19, 2023,04:39 PM IST

- மஞ்சுளா தேவி


ஸ்ரீவைகுண்டம்: தொடர் கனமழையால் ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில், ரயிலில் மூன்றாவது நாளாக சிக்கித் தவிக்கும் பணிகளை விமானப்படை உதவியுடன் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.


திருச்செந்தூரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. கன மழை கொட்டி தீர்த்த வேளையில் இரவு 9 மணி அளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீ வைகுண்டம் அருகே நிறுத்தப்பட்டது. இங்கு மண்ணரிப்பு ஏற்பட்டதால் ரயில்வே பாலம் சேதம் அடைந்தது. இதனால் ரயிலை இயக்க முடியவில்லை. தொடர் கனமழையால் ரயில் நிலையம் முழுவதும் பத்தடி வரை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.


தகவல் அறிந்த மீட்பு படையினர் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட 800 பேரில்  300 பேர் மட்டும் மீட்டு அவர்களை அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் தண்ணீர் அதிகரித்ததால் மற்ற 500 பேரை மீட்க முடியவில்லை. மீதம் உள்ளவர்கள் விமானப்படை மூலம் நாளை மீட்கப்படுவார் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று அறிவித்திருந்தார்.




இந்நிலையில் இன்று காலை மீட்புப் படையினர் 8 .50 மணி அளவில் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தனர். காலை 10 மணி அளவில் கர்ப்பிணி உட்பட மேலும் 4 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். விமானப்படையின் மூலம் ரயில் நிலையத்தில் சிக்கி உள்ள பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இருப்பினும் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. முதற்கட்டமாக 100 ரயில் பயணிகள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களை 3 கிமீ தூரம் நடந்தே, வெள்ளூருக்கு  அழைத்து வந்தனர். அங்கிருந்து பஸ்கள் மூலம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 


பின்னர் இந்தப் பயணிகளை, சென்னை வரை செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரயில் நிலையப் பயணிகளை மீட்கும் பணிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலமாக கண்காணித்து ரயில்வே அதிகாரிகளை முடுக்கி விட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்