Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!

Dec 08, 2025,11:02 AM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன் 


சென்னை: வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் திட்டமிட முடியாது.. அதுதான் நமக்கான திட்டங்களை வைத்திருக்கும். அந்தத் திட்டங்கள் செயலாகும்போது அதை சிறப்பானதாக வடிவமைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.


இந்த வாரத்தை தொடங்கும் உங்களுக்கு அது சிறப்பானதாக மாற வாழ்த்துகள்.. வாங்க சில சிந்தனைத் துளிகளை மனதில் ஏந்தி இந்த வாரத்துக்குள் நுழைவோம்.


சிந்தனைத்துளிகள் 




வைராக்கியம் வாழவைக்கும்..

பொறாமை புரளி பேசவைக்கும் ..

கோபம் உண்மையை  உரைக்கும் 

மகிழ்ச்சி  சிரிக்க வைக்கும் 

துன்பம் அழ வைக்கும் 

மனக்கட்டுப்பாடும், விடாமுயற்சியும், நேர்மறை  எண்ணமும் நம்மை சிறந்த எடுத்துக்காட்டு ஆக்கும். 


--


பருவகாலங்களைப் போல மனித வளர்ச்சி  பருவங்களையும்  ரசித்து வாழ்வோம். இளமை, முதுமை என வேறுபாடு பார்க்காதே. மனம் என்றும் இளமைதான் உன் எண்ணங்கள் அழகானால். 


--


பொருள்,வண்ணம்,வடிவம்,இயற்கை,செயற்கை எதுவாக இருந்தாலும் குழந்தைப்பருவம்  ரசிக்கும் அனைத்தையும் உயிருள்ளவையாக பாவிக்கும் விளையாடி மகிழும் ... வளர்ந்த பின்னே உயிருள்ள  மனிதனின் உணர்வுகள் கூட புரிந்துகொள்ள முயற்சிக்காமல்  இயந்திரத்தனமாக வாழ்வதேனோ  எங்கே தொலைந்து போனது இயல்புகுணம். மனிதநேயம் கொள்வோம்,அன்புசெலுத்துவோம் . பணம் என்பது அத்தியாவசியத் தேவை.குணம் என்பது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கத் தேவை.


--


எதிர்மறையான விமர்சனங்கள்  வெறும்  தடைக்கற்களே ,  நம்மை வீழ்த்தும் கற்கள் அல்ல ,  இவை நம்மை ஆளாமல் இருக்கவேண்டுமானால்... தவறு நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும்... இன்றேல் தடையென தூக்கி எறிந்து 

வீரநடைபோட வேண்டும்.


(கவிஞர் ஜி.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்