- க.யாஸ்மின் சிராஜூதீன்
சென்னை: வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் திட்டமிட முடியாது.. அதுதான் நமக்கான திட்டங்களை வைத்திருக்கும். அந்தத் திட்டங்கள் செயலாகும்போது அதை சிறப்பானதாக வடிவமைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
இந்த வாரத்தை தொடங்கும் உங்களுக்கு அது சிறப்பானதாக மாற வாழ்த்துகள்.. வாங்க சில சிந்தனைத் துளிகளை மனதில் ஏந்தி இந்த வாரத்துக்குள் நுழைவோம்.
சிந்தனைத்துளிகள்

வைராக்கியம் வாழவைக்கும்..
பொறாமை புரளி பேசவைக்கும் ..
கோபம் உண்மையை உரைக்கும்
மனக்கட்டுப்பாடும், விடாமுயற்சியும், நேர்மறை எண்ணமும் நம்மை சிறந்த எடுத்துக்காட்டு ஆக்கும்.
--
பருவகாலங்களைப் போல மனித வளர்ச்சி பருவங்களையும் ரசித்து வாழ்வோம். இளமை, முதுமை என வேறுபாடு பார்க்காதே. மனம் என்றும் இளமைதான் உன் எண்ணங்கள் அழகானால்.
--
பொருள்,வண்ணம்,வடிவம்,இயற்கை,செயற்கை எதுவாக இருந்தாலும் குழந்தைப்பருவம் ரசிக்கும் அனைத்தையும் உயிருள்ளவையாக பாவிக்கும் விளையாடி மகிழும் ... வளர்ந்த பின்னே உயிருள்ள மனிதனின் உணர்வுகள் கூட புரிந்துகொள்ள முயற்சிக்காமல் இயந்திரத்தனமாக வாழ்வதேனோ எங்கே தொலைந்து போனது இயல்புகுணம். மனிதநேயம் கொள்வோம்,அன்புசெலுத்துவோம் . பணம் என்பது அத்தியாவசியத் தேவை.குணம் என்பது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கத் தேவை.
--
எதிர்மறையான விமர்சனங்கள் வெறும் தடைக்கற்களே , நம்மை வீழ்த்தும் கற்கள் அல்ல , இவை நம்மை ஆளாமல் இருக்கவேண்டுமானால்... தவறு நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும்... இன்றேல் தடையென தூக்கி எறிந்து
வீரநடைபோட வேண்டும்.
(கவிஞர் ஜி.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}