Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!

Dec 08, 2025,11:02 AM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன் 


சென்னை: வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் திட்டமிட முடியாது.. அதுதான் நமக்கான திட்டங்களை வைத்திருக்கும். அந்தத் திட்டங்கள் செயலாகும்போது அதை சிறப்பானதாக வடிவமைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.


இந்த வாரத்தை தொடங்கும் உங்களுக்கு அது சிறப்பானதாக மாற வாழ்த்துகள்.. வாங்க சில சிந்தனைத் துளிகளை மனதில் ஏந்தி இந்த வாரத்துக்குள் நுழைவோம்.


சிந்தனைத்துளிகள் 




வைராக்கியம் வாழவைக்கும்..

பொறாமை புரளி பேசவைக்கும் ..

கோபம் உண்மையை  உரைக்கும் 

மகிழ்ச்சி  சிரிக்க வைக்கும் 

துன்பம் அழ வைக்கும் 

மனக்கட்டுப்பாடும், விடாமுயற்சியும், நேர்மறை  எண்ணமும் நம்மை சிறந்த எடுத்துக்காட்டு ஆக்கும். 


--


பருவகாலங்களைப் போல மனித வளர்ச்சி  பருவங்களையும்  ரசித்து வாழ்வோம். இளமை, முதுமை என வேறுபாடு பார்க்காதே. மனம் என்றும் இளமைதான் உன் எண்ணங்கள் அழகானால். 


--


பொருள்,வண்ணம்,வடிவம்,இயற்கை,செயற்கை எதுவாக இருந்தாலும் குழந்தைப்பருவம்  ரசிக்கும் அனைத்தையும் உயிருள்ளவையாக பாவிக்கும் விளையாடி மகிழும் ... வளர்ந்த பின்னே உயிருள்ள  மனிதனின் உணர்வுகள் கூட புரிந்துகொள்ள முயற்சிக்காமல்  இயந்திரத்தனமாக வாழ்வதேனோ  எங்கே தொலைந்து போனது இயல்புகுணம். மனிதநேயம் கொள்வோம்,அன்புசெலுத்துவோம் . பணம் என்பது அத்தியாவசியத் தேவை.குணம் என்பது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கத் தேவை.


--


எதிர்மறையான விமர்சனங்கள்  வெறும்  தடைக்கற்களே ,  நம்மை வீழ்த்தும் கற்கள் அல்ல ,  இவை நம்மை ஆளாமல் இருக்கவேண்டுமானால்... தவறு நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும்... இன்றேல் தடையென தூக்கி எறிந்து 

வீரநடைபோட வேண்டும்.


(கவிஞர் ஜி.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?

news

தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?

news

Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

news

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!

news

ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்