மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஜப்பானிலும் உணரப்பட்டது. இரு நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானவோ என்ற இடத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். கட்டடங்கள், வீடுகள் அதிர்ந்து ஆடின. மேலும் ஜப்பானின் தென் மேற்கு கடலோரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளின் கடலோரப் பகுதி மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு அறிவுறுத்தப்பட்டனர். 3 மீட்டர் அல்லது அதற்கு மேல் உயரம் கொண்ட அலைகள் எழும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இன்று நள்ளிரவுக்கு மேல் சுனாமி அலைகள் எழும் என்றும் பல மணி நேரங்களுக்கு இது நீடிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையமும் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் ஆஃப்டர் ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் அதிகம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதில்தான் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் மிக மிக சாதாரணமானது. அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}