மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஜப்பானிலும் உணரப்பட்டது. இரு நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானவோ என்ற இடத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். கட்டடங்கள், வீடுகள் அதிர்ந்து ஆடின. மேலும் ஜப்பானின் தென் மேற்கு கடலோரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளின் கடலோரப் பகுதி மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு அறிவுறுத்தப்பட்டனர். 3 மீட்டர் அல்லது அதற்கு மேல் உயரம் கொண்ட அலைகள் எழும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இன்று நள்ளிரவுக்கு மேல் சுனாமி அலைகள் எழும் என்றும் பல மணி நேரங்களுக்கு இது நீடிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையமும் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் ஆஃப்டர் ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் அதிகம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதில்தான் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் மிக மிக சாதாரணமானது. அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}