மதுரை மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் .. பலத்த நம்பிக்கையில் சு. வெங்கடேசன்!

Jun 04, 2024,01:50 PM IST

மதுரை:  மதுரையில்  மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார். இந்த நிலையில், மதுரை மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் என நம்புகிறேன் என்று சு. வெங்கடேசன் அடக்கமாக தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றியை நோக்கி பயணம் செய்து கொண்டுள்ளன. தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், அதிகப்படியாக திமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. 




அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று மதுரை. மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் 59,378 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் 37,198 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் 21,699 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும், நாதக  வேட்பாளர் மோ.சத்யாதேவி 16,595 வாக்குகள் பெற்று 4ம் இடத்திலும் உள்ளார்.


வெற்றி முகத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் மதுரை  மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நான்கு சுற்று முடிவுகளிலும் இந்தியா கூட்டணியில் உள்ள சு.வெங்கடேசன் ஆகிய எனக்கு மதுரை மக்கள் சுமார் 40,000 வாக்குகள் முன்னணி அளித்துள்ளனர். இதே சதவீதம் தான் தொடரும் என நினைக்கிறேன். 


முதல் சுற்றில் இருந்து 10,000 வாக்குகளாக முன்னேறிச் செல்கின்றோம். மதுரையில் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும். கடந்த முறை இருந்ததை விட இந்த முறை அதிக வாக்குகள் அளித்துள்ளனர். மிகச்சிறப்பாக அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. நிச்சயம் மோடி மீடியாக்கள் சொன்னதை மக்கள் தகர்த்துக் கொண்டு உள்ளார்கள் என்பது தான் வந்து கொண்டிருக்கிற செய்தி என்று கூறியுள்ளார்.


12வது சுற்றின் முடிவுப்படி  சு. வெங்கடேசன், 1,38,733 வாக்குகள் முன்னிலை பெற்று முன்னேறிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்