மதுரை: 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்கின்றோம் என்று கூறி மதுரையில் வாக்கு சேகரித்து வருகிறார் சிட்டிங் எம்.பியும், சிபிஎம் சார்பில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளருமான சு. வெங்கடேசன்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலயில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாக்கு சேகரித்து வருகின்றனர். கடும் வெயில் தற்பொழுது தமிழகத்தை வாட்டி வதைத்து வந்தாலும், வெயிலை பொருட்படுத்தாது வேட்பாளர்கள் முக்கிய இடங்களுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணை ஆதரித்து நேற்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், திமுகவின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் பழனிச்சாமி. அதிற்கு பதில் அளிக்கும் விதமாக சு.வெங்கடேன் பதிலடி கொடுத்துள்ளார்.

சு.வெங்கடேசன் தனது பிரச்சாரத்தின்போது கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகள் 170 வெற்றிகளை சொல்லி ஓட்டு கேட்கின்றோம். நாங்க உங்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், மீண்டும் நாங்கள் செயல்பட அருவாள், சுத்தியல், நட்சத்திர சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கூறி தான் நாங்கள் மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். அதே போல் மதுரையின் கம்பீரமாக நிற்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக தமிழர்கள் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம், நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என திமுக அரசின் ஒவ்வொரு சாதனை திட்டங்களையும் கம்பீரமாக கூறி தான் ஓட்டு கேட்கின்றோம் என்றார் அவர்.
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!
சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!
ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
{{comments.comment}}