மதுரை: 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்கின்றோம் என்று கூறி மதுரையில் வாக்கு சேகரித்து வருகிறார் சிட்டிங் எம்.பியும், சிபிஎம் சார்பில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளருமான சு. வெங்கடேசன்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலயில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாக்கு சேகரித்து வருகின்றனர். கடும் வெயில் தற்பொழுது தமிழகத்தை வாட்டி வதைத்து வந்தாலும், வெயிலை பொருட்படுத்தாது வேட்பாளர்கள் முக்கிய இடங்களுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணை ஆதரித்து நேற்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், திமுகவின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் பழனிச்சாமி. அதிற்கு பதில் அளிக்கும் விதமாக சு.வெங்கடேன் பதிலடி கொடுத்துள்ளார்.

சு.வெங்கடேசன் தனது பிரச்சாரத்தின்போது கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகள் 170 வெற்றிகளை சொல்லி ஓட்டு கேட்கின்றோம். நாங்க உங்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், மீண்டும் நாங்கள் செயல்பட அருவாள், சுத்தியல், நட்சத்திர சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கூறி தான் நாங்கள் மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். அதே போல் மதுரையின் கம்பீரமாக நிற்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக தமிழர்கள் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம், நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என திமுக அரசின் ஒவ்வொரு சாதனை திட்டங்களையும் கம்பீரமாக கூறி தான் ஓட்டு கேட்கின்றோம் என்றார் அவர்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}