மதுரை: 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்கின்றோம் என்று கூறி மதுரையில் வாக்கு சேகரித்து வருகிறார் சிட்டிங் எம்.பியும், சிபிஎம் சார்பில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளருமான சு. வெங்கடேசன்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலயில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாக்கு சேகரித்து வருகின்றனர். கடும் வெயில் தற்பொழுது தமிழகத்தை வாட்டி வதைத்து வந்தாலும், வெயிலை பொருட்படுத்தாது வேட்பாளர்கள் முக்கிய இடங்களுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணை ஆதரித்து நேற்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், திமுகவின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் பழனிச்சாமி. அதிற்கு பதில் அளிக்கும் விதமாக சு.வெங்கடேன் பதிலடி கொடுத்துள்ளார்.
சு.வெங்கடேசன் தனது பிரச்சாரத்தின்போது கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகள் 170 வெற்றிகளை சொல்லி ஓட்டு கேட்கின்றோம். நாங்க உங்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், மீண்டும் நாங்கள் செயல்பட அருவாள், சுத்தியல், நட்சத்திர சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கூறி தான் நாங்கள் மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். அதே போல் மதுரையின் கம்பீரமாக நிற்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக தமிழர்கள் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம், நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என திமுக அரசின் ஒவ்வொரு சாதனை திட்டங்களையும் கம்பீரமாக கூறி தான் ஓட்டு கேட்கின்றோம் என்றார் அவர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}