சென்னை: புயல் மற்றும் கன மழை வெள்ளம் காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருந்த சென்னை புறநகர் ரயில் சேவை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இன்று முதல் வழக்கமான அட்டவணையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையை உலுக்கிய கடும் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட கன மழை, தொடர்ந்து உருவான வெள்ளப் பெருக்கால் நகரிலும் புறநகர்களிலும் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளானது. ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் ஸ்தம்பித்துப் போயின. நகரின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியாமல் உள்ளது.
இந்த நிலையில் புயலைத் தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் முழுவதும் ரயில் போக்குவத்து நிறுத்தப்பட்ட ரயில் சேவை பின்னர் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டு வந்தது. தற்போது ரயில்வே டிராக்குகள் அனைத்தும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இதனால் மீண்டும் ரயில் சேவை இயல்பு நிலைக்கு மாறியுள்ளது.

இன்று காலை முதல் வழக்கமான அட்டவணையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம் திருத்தணி, வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவை இயல்பாக தொடங்கியுள்ளது.
சென்னை கடற்கரை - சூலுர்ப்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வழக்கமான சேவைக்குப் பதில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் திருவொற்றியூர் - சூலூர்ப்பேட்டை, கும்மிடிப்பூண்டிக்கு அரை மணி நேர இடைவேளையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}