சென்னை: புயல் மற்றும் கன மழை வெள்ளம் காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருந்த சென்னை புறநகர் ரயில் சேவை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இன்று முதல் வழக்கமான அட்டவணையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையை உலுக்கிய கடும் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட கன மழை, தொடர்ந்து உருவான வெள்ளப் பெருக்கால் நகரிலும் புறநகர்களிலும் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளானது. ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் ஸ்தம்பித்துப் போயின. நகரின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியாமல் உள்ளது.
இந்த நிலையில் புயலைத் தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் முழுவதும் ரயில் போக்குவத்து நிறுத்தப்பட்ட ரயில் சேவை பின்னர் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டு வந்தது. தற்போது ரயில்வே டிராக்குகள் அனைத்தும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இதனால் மீண்டும் ரயில் சேவை இயல்பு நிலைக்கு மாறியுள்ளது.
இன்று காலை முதல் வழக்கமான அட்டவணையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம் திருத்தணி, வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவை இயல்பாக தொடங்கியுள்ளது.
சென்னை கடற்கரை - சூலுர்ப்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வழக்கமான சேவைக்குப் பதில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் திருவொற்றியூர் - சூலூர்ப்பேட்டை, கும்மிடிப்பூண்டிக்கு அரை மணி நேர இடைவேளையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}