சென்னை: சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் காலையிலேயே செமையான ஒரு மழை பெய்து மக்களைக் குளிர வைத்து விட்டது. இந்த மழை இன்று முழுக்க அவ்வப்போது தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை வரப் போகிறது. நாள் நெருங்கி விட்டது. 16ம் தேதிக்கு மேல் மழை தொடங்கலாம் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதே அதற்கான சூழலை சென்னை சந்திக்க ஆரம்பித்து விட்டது. சில நாட்களாகவே அவ்வப்போது சின்ன சின்னதாக மழை பெய்து வந்தது. கூடவே வெயிலும் இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை டோட்டலாக சூழல் மாறியது. காலையில் சரியான மழை ஒன்று பெய்து தீர்த்தது. குறிப்பாக புறநகர்களில் சூப்பராக மழை பெய்தது. திடீர் கன மழையால் மக்கள் ஹேப்பியாகி விட்டனர். இந்த மழை இன்று முழுவதும் அவ்வப்போது இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கன மழையாக இது அதிகரிக்கும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஆக, இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலம் சரியான அதிரடியுடன் தொடங்கும் என்று எதிர்பார்ப்போம்.
அதேபோல தூத்துக்குடி முதல் சென்னை வரியைலான கடலோர மாவட்ட மக்கள் இன்று முதல் வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க என்றும் வெதர்மேன் அட்வைஸ் கொடுத்துள்ளார்... வாங்க மக்களே இன்னும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. சந்தோஷமாக அனுபவிப்போம்.. கூடவே ஜாக்கிரதையாகவும் இருந்து கொள்வோம்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}