சென்னை: சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் காலையிலேயே செமையான ஒரு மழை பெய்து மக்களைக் குளிர வைத்து விட்டது. இந்த மழை இன்று முழுக்க அவ்வப்போது தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை வரப் போகிறது. நாள் நெருங்கி விட்டது. 16ம் தேதிக்கு மேல் மழை தொடங்கலாம் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதே அதற்கான சூழலை சென்னை சந்திக்க ஆரம்பித்து விட்டது. சில நாட்களாகவே அவ்வப்போது சின்ன சின்னதாக மழை பெய்து வந்தது. கூடவே வெயிலும் இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை டோட்டலாக சூழல் மாறியது. காலையில் சரியான மழை ஒன்று பெய்து தீர்த்தது. குறிப்பாக புறநகர்களில் சூப்பராக மழை பெய்தது. திடீர் கன மழையால் மக்கள் ஹேப்பியாகி விட்டனர். இந்த மழை இன்று முழுவதும் அவ்வப்போது இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கன மழையாக இது அதிகரிக்கும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஆக, இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலம் சரியான அதிரடியுடன் தொடங்கும் என்று எதிர்பார்ப்போம்.
அதேபோல தூத்துக்குடி முதல் சென்னை வரியைலான கடலோர மாவட்ட மக்கள் இன்று முதல் வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க என்றும் வெதர்மேன் அட்வைஸ் கொடுத்துள்ளார்... வாங்க மக்களே இன்னும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. சந்தோஷமாக அனுபவிப்போம்.. கூடவே ஜாக்கிரதையாகவும் இருந்து கொள்வோம்.
அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!
கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி
தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!
India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா
T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!
இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!
ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!
பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!
அபிஷேக் - சஞ்சு சாம்சன் அதிரிபுதிரி ஆட்டம்.. பாகிஸ்தான் உலக சாதனையை முறியடித்த இந்தியா!
{{comments.comment}}