மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

Oct 14, 2025,05:31 PM IST

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் காலையிலேயே செமையான ஒரு மழை பெய்து மக்களைக் குளிர வைத்து விட்டது. இந்த மழை இன்று முழுக்க அவ்வப்போது தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


வட கிழக்குப் பருவ மழை வரப் போகிறது. நாள் நெருங்கி விட்டது. 16ம் தேதிக்கு மேல் மழை தொடங்கலாம் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதே அதற்கான சூழலை சென்னை சந்திக்க ஆரம்பித்து விட்டது. சில நாட்களாகவே அவ்வப்போது சின்ன சின்னதாக மழை பெய்து வந்தது. கூடவே வெயிலும் இருந்தது.




இந்த நிலையில் இன்று காலை டோட்டலாக சூழல் மாறியது. காலையில் சரியான மழை ஒன்று பெய்து தீர்த்தது. குறிப்பாக புறநகர்களில் சூப்பராக மழை பெய்தது. திடீர் கன மழையால்  மக்கள் ஹேப்பியாகி விட்டனர். இந்த மழை இன்று முழுவதும் அவ்வப்போது இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


மேலும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கன மழையாக இது அதிகரிக்கும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஆக, இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலம் சரியான அதிரடியுடன் தொடங்கும் என்று எதிர்பார்ப்போம்.


அதேபோல தூத்துக்குடி முதல் சென்னை வரியைலான கடலோர மாவட்ட மக்கள் இன்று முதல் வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க என்றும் வெதர்மேன் அட்வைஸ் கொடுத்துள்ளார்... வாங்க மக்களே இன்னும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. சந்தோஷமாக அனுபவிப்போம்.. கூடவே ஜாக்கிரதையாகவும் இருந்து கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்