ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் விளையாடும் விதத்தைப் பார்த்து அடுத்த தோனி ரெடியாகிறார் என்று கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. "தல" தோனியின் சொந்த ஊரில்தான் இப்படி சூப்பராக செயல்பட்டு, அடுத்த தோனி என்று கவாஸ்கரால் பாராட்டப்பட்டுள்ளார் துருவ் ஜூரல். முதல் இன்னிங்ஸில் சூப்பராக விளையாடிய ஜூரல் 90 ரன்களைக் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார்.

நேற்று 30 ரன்களுடன் களத்தில் இருந்த ஜூரல் இன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடி 90 ரன்களைக் குவித்து அசத்தினார். முதல் சதத்தை நோக்கி அம்சமாக நடை போட்டுக் கொண்டிருந்த ஜூரலை, டாம் ஹார்ட்லியின் பந்து கிளீன் போல்டாக்கி கனவை தகர்த்து விட்டது. இது ஜூரலுக்கு 2வது டெஸ்ட் போட்டியாகும்.
ஜூரலின் சிறப்பான ஆட்டம் குறித்து புகழ்ந்துள்ளார் கவாஸ்கர். அவர் கூறுகையில் அருமையான presence of mind ஜூரலிடம் உள்ளது. தோனி போலவே விளையாடுகிறார். இவர்தான் அடுத்த தோனியாக வருவார் என்று எனது உள் மனசு சொல்கிறது. இதேபோல ஜூரல் தொடர்ந்து விளையாடினால், நிச்சயம் பல செஞ்சுரிகளை அவர் எடுக்க முடியும்.
இன்று அவர் சதத்தை மிஸ் செய்திருக்கலாம். ஆனால் அவர் அடுத்தடுத்து பல சதங்களைப் போடுவார்.. அந்தத் திறமை அவரிடம் உள்ளது என்றார் கவாஸ்கர்.
8வது விக்கெட்டுக்கு ஜூரலும், குல்தீப் யாதவும் இணைந்து 76 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பாசிர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார்.
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி
அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
பூ அல்ல பாவை.. சிவப்பில் மலரும் மனிதம்!
ஒரு மழை நாளிலிருந்து!
உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை
என் தனிமையின் பேரழகு
{{comments.comment}}