ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் விளையாடும் விதத்தைப் பார்த்து அடுத்த தோனி ரெடியாகிறார் என்று கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. "தல" தோனியின் சொந்த ஊரில்தான் இப்படி சூப்பராக செயல்பட்டு, அடுத்த தோனி என்று கவாஸ்கரால் பாராட்டப்பட்டுள்ளார் துருவ் ஜூரல். முதல் இன்னிங்ஸில் சூப்பராக விளையாடிய ஜூரல் 90 ரன்களைக் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார்.

நேற்று 30 ரன்களுடன் களத்தில் இருந்த ஜூரல் இன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடி 90 ரன்களைக் குவித்து அசத்தினார். முதல் சதத்தை நோக்கி அம்சமாக நடை போட்டுக் கொண்டிருந்த ஜூரலை, டாம் ஹார்ட்லியின் பந்து கிளீன் போல்டாக்கி கனவை தகர்த்து விட்டது. இது ஜூரலுக்கு 2வது டெஸ்ட் போட்டியாகும்.
ஜூரலின் சிறப்பான ஆட்டம் குறித்து புகழ்ந்துள்ளார் கவாஸ்கர். அவர் கூறுகையில் அருமையான presence of mind ஜூரலிடம் உள்ளது. தோனி போலவே விளையாடுகிறார். இவர்தான் அடுத்த தோனியாக வருவார் என்று எனது உள் மனசு சொல்கிறது. இதேபோல ஜூரல் தொடர்ந்து விளையாடினால், நிச்சயம் பல செஞ்சுரிகளை அவர் எடுக்க முடியும்.
இன்று அவர் சதத்தை மிஸ் செய்திருக்கலாம். ஆனால் அவர் அடுத்தடுத்து பல சதங்களைப் போடுவார்.. அந்தத் திறமை அவரிடம் உள்ளது என்றார் கவாஸ்கர்.
8வது விக்கெட்டுக்கு ஜூரலும், குல்தீப் யாதவும் இணைந்து 76 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பாசிர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}