மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. கண்விழித்ததும்.. டாக்டர்களுக்கு நன்றி சொன்ன ரஜினிகாந்த்

Oct 01, 2024,04:13 PM IST

சென்னை: உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் கண்விழித்ததும், தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். வேட்டையன் படத்தை முடித்து விட்ட ரஜினிகாந்த், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பிய ரஜினிகாந்த்துக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 




இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவரை தொடர்கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். இன்று காலையில், 3 விதமான பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், முதலில் அடிவயிற்றில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அறுவை  சிக்சை எதும் செய்யப்படவில்லை என்றும், ஆஞ்சியோ மட்டும் செய்யப்பட்டதாகவும், அப்போது அரைமணி நேரம் மயக்க நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இருந்ததாக தெரிகிறது. 


அதன்பின்னர் கண் விழித்த ரஜினிகாந்த் மருத்துவர்களிடம் சிரித்து பேசியதாகவும், தனக்கு சிகிச்சையளித்த டாக்டருக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து குடும்பத்தாருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. இன்று இரவு அல்லது நாளை காலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு செல்ல உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நடிகர் ரஜினிகாந்த் தற்போது நலமுடன் இருக்கும் தகவல்கள் இணையத்தில் வைராகி வரும் நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்