டெல்லி: தேர்தல் பாண்டுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும். அனைத்து விவரம் என்றால் ஒரு விவரத்தையும் நீங்கள் மறைக்கக் கூடாது. மறைக்கக் கூடியது என்று நீங்கள் கருதும் அனைத்தையும் வெளியிட வேண்டும். செவ்வாய்க்கிழமைக்குள் இதைச் செய்ய வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு இன்று உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
எல்லாவற்றையும் தாக்கல் செய்த பிறகு நாங்கள் ஒரு விவரத்தையும் மறைக்கவில்லை, எல்லாவற்றையும் வெளியிட்டு விட்டோம் என்ற பிரமாணப் பத்திரத்தையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.
தேர்தல் பாண்டுகள் தொடர்பான வழக்கில் பாண்டுகளின் எண்கள் உள்ளிட்ட சில விவரங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிடவில்லை. இது கடும் கண்டனத்தை எழுப்பியது. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்தல் பாண்டுகள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் செயலில் நேர்மை இல்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தேர்தல் பாண்டுகளின் எண்களை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்று தலைமை நீதிபதி கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து வங்கியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, தேர்தல் பாண்டுகளின் எண்களை வெளியிடுவோம் என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து தேர்தல் பாண்டுகள் குறித்த அனைத்து விவரங்களையும் செவ்வாய்க்கிழமைக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எதையும் மறைக்கவில்லை எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விட்டோம் என்ற பிரமாணப் பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி விவரத்தை வெளியிட்டதும் அதை தேர்தல் ஆணையம் தனது தளத்தி் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஸ்டேட் வங்கியிடம் உள்ள தேர்தல் பாண்டுகள் குறித்த ஒரு விவரத்தையும் மறைக்கக் கூடாது. எல்லாவற்றையும் வெளியிட வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
{{comments.comment}}