எதையும் மறைக்கக் கூடாது.. மொத்த விவரத்தையும் சொல்ல வேண்டும்.. எஸ்.பி.ஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Mar 18, 2024,01:13 PM IST

டெல்லி:  தேர்தல் பாண்டுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும். அனைத்து விவரம் என்றால் ஒரு விவரத்தையும் நீங்கள் மறைக்கக் கூடாது. மறைக்கக் கூடியது என்று நீங்கள் கருதும் அனைத்தையும் வெளியிட வேண்டும். செவ்வாய்க்கிழமைக்குள் இதைச் செய்ய வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு இன்று உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.


எல்லாவற்றையும் தாக்கல் செய்த பிறகு நாங்கள் ஒரு விவரத்தையும் மறைக்கவில்லை, எல்லாவற்றையும் வெளியிட்டு விட்டோம் என்ற பிரமாணப் பத்திரத்தையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.




தேர்தல் பாண்டுகள் தொடர்பான வழக்கில் பாண்டுகளின் எண்கள் உள்ளிட்ட சில விவரங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிடவில்லை. இது கடும் கண்டனத்தை எழுப்பியது. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்தல் பாண்டுகள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் செயலில் நேர்மை இல்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.


தேர்தல் பாண்டுகளின் எண்களை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்று தலைமை நீதிபதி கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து வங்கியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, தேர்தல் பாண்டுகளின் எண்களை வெளியிடுவோம் என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து தேர்தல் பாண்டுகள் குறித்த அனைத்து விவரங்களையும் செவ்வாய்க்கிழமைக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எதையும் மறைக்கவில்லை எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விட்டோம் என்ற பிரமாணப் பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி விவரத்தை வெளியிட்டதும் அதை தேர்தல் ஆணையம் தனது தளத்தி் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


ஸ்டேட் வங்கியிடம் உள்ள தேர்தல் பாண்டுகள் குறித்த ஒரு விவரத்தையும் மறைக்கக் கூடாது. எல்லாவற்றையும் வெளியிட வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகள்

news

எங்க வீட்டுக் குலதெய்வம் வீரப்பன்.. செம்மண்ணை எடுத்து வந்து.. 25 பிள்ளையார் பிடித்து!

news

அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!

news

கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி

news

தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

news

India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

news

T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

news

இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!

news

ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!

news

பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்