எதையும் மறைக்கக் கூடாது.. மொத்த விவரத்தையும் சொல்ல வேண்டும்.. எஸ்.பி.ஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Mar 18, 2024,01:13 PM IST

டெல்லி:  தேர்தல் பாண்டுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும். அனைத்து விவரம் என்றால் ஒரு விவரத்தையும் நீங்கள் மறைக்கக் கூடாது. மறைக்கக் கூடியது என்று நீங்கள் கருதும் அனைத்தையும் வெளியிட வேண்டும். செவ்வாய்க்கிழமைக்குள் இதைச் செய்ய வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு இன்று உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.


எல்லாவற்றையும் தாக்கல் செய்த பிறகு நாங்கள் ஒரு விவரத்தையும் மறைக்கவில்லை, எல்லாவற்றையும் வெளியிட்டு விட்டோம் என்ற பிரமாணப் பத்திரத்தையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.




தேர்தல் பாண்டுகள் தொடர்பான வழக்கில் பாண்டுகளின் எண்கள் உள்ளிட்ட சில விவரங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிடவில்லை. இது கடும் கண்டனத்தை எழுப்பியது. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்தல் பாண்டுகள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் செயலில் நேர்மை இல்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.


தேர்தல் பாண்டுகளின் எண்களை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்று தலைமை நீதிபதி கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து வங்கியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, தேர்தல் பாண்டுகளின் எண்களை வெளியிடுவோம் என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து தேர்தல் பாண்டுகள் குறித்த அனைத்து விவரங்களையும் செவ்வாய்க்கிழமைக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எதையும் மறைக்கவில்லை எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விட்டோம் என்ற பிரமாணப் பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி விவரத்தை வெளியிட்டதும் அதை தேர்தல் ஆணையம் தனது தளத்தி் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


ஸ்டேட் வங்கியிடம் உள்ள தேர்தல் பாண்டுகள் குறித்த ஒரு விவரத்தையும் மறைக்கக் கூடாது. எல்லாவற்றையும் வெளியிட வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்