டெல்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் கோர்ட் அனுமதி இல்லாமல் யாரையும் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்:

சிறப்பு நீதிமன்றத்தில் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் மீது குற்றச்சாட்டு பதிவாகி விட்டால், அவரை கோர்ட் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது. அவரைக் கைது செய்யவும் முடியாது.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த விரும்பினால், முறைப்படி சம்பந்தப்பட்ட சிறப்பு கோர்ட்டை அணுகி அனுமதி பெற வேண்டும். அனுமதி அளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் சிறப்பு கோர்ட்டின் முடிவைப் பொறுத்தது. சரியான காரணங்கள் இருந்தால் சிறப்பு கோர்ட், விசாரணைக்கு அனுமதி அளிக்கும். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒருவரை அனுப்ப வேண்டுமா வேண்டாமா என்பதையும் சிறப்பு நீதிமன்றமே முடிவு செய்யும்.
உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கை விசாரித்தபோது இந்த கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}