PMLA சட்டப்படி கைது செய்ய.. அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடுகள்.. அறிவித்தது சுப்ரீம் கோர்ட்!

May 16, 2024,06:00 PM IST

டெல்லி:  பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.


சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் கோர்ட் அனுமதி இல்லாமல் யாரையும் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்:




சிறப்பு நீதிமன்றத்தில் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் மீது குற்றச்சாட்டு பதிவாகி விட்டால், அவரை கோர்ட் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது. அவரைக் கைது செய்யவும் முடியாது. 


கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த விரும்பினால், முறைப்படி சம்பந்தப்பட்ட சிறப்பு கோர்ட்டை அணுகி அனுமதி பெற வேண்டும். அனுமதி அளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் சிறப்பு கோர்ட்டின் முடிவைப் பொறுத்தது.  சரியான காரணங்கள் இருந்தால் சிறப்பு கோர்ட், விசாரணைக்கு அனுமதி அளிக்கும். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒருவரை அனுப்ப வேண்டுமா வேண்டாமா என்பதையும் சிறப்பு நீதிமன்றமே முடிவு செய்யும்.


உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கை விசாரித்தபோது இந்த கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்