டெல்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் கோர்ட் அனுமதி இல்லாமல் யாரையும் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்:

சிறப்பு நீதிமன்றத்தில் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் மீது குற்றச்சாட்டு பதிவாகி விட்டால், அவரை கோர்ட் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது. அவரைக் கைது செய்யவும் முடியாது.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த விரும்பினால், முறைப்படி சம்பந்தப்பட்ட சிறப்பு கோர்ட்டை அணுகி அனுமதி பெற வேண்டும். அனுமதி அளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் சிறப்பு கோர்ட்டின் முடிவைப் பொறுத்தது. சரியான காரணங்கள் இருந்தால் சிறப்பு கோர்ட், விசாரணைக்கு அனுமதி அளிக்கும். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒருவரை அனுப்ப வேண்டுமா வேண்டாமா என்பதையும் சிறப்பு நீதிமன்றமே முடிவு செய்யும்.
உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கை விசாரித்தபோது இந்த கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}