டெல்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் கோர்ட் அனுமதி இல்லாமல் யாரையும் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்:

சிறப்பு நீதிமன்றத்தில் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் மீது குற்றச்சாட்டு பதிவாகி விட்டால், அவரை கோர்ட் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது. அவரைக் கைது செய்யவும் முடியாது.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த விரும்பினால், முறைப்படி சம்பந்தப்பட்ட சிறப்பு கோர்ட்டை அணுகி அனுமதி பெற வேண்டும். அனுமதி அளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் சிறப்பு கோர்ட்டின் முடிவைப் பொறுத்தது. சரியான காரணங்கள் இருந்தால் சிறப்பு கோர்ட், விசாரணைக்கு அனுமதி அளிக்கும். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒருவரை அனுப்ப வேண்டுமா வேண்டாமா என்பதையும் சிறப்பு நீதிமன்றமே முடிவு செய்யும்.
உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கை விசாரித்தபோது இந்த கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}