- ஸ்வர்ணலட்சுமி
அதிர்ஷ்டம், மங்களகரமானது மற்றும் செழிப்பு ஆகியவற்றை குறிக்கிறது ஸ்வஸ்திக் சின்னம். ஸ்வஸ்திக் சின்னம் வீட்டு வாஸ்து தோஷங்களை குறைக்கும் என்று நம்பப்படுகிறது .விஷ்ணு மற்றும் லட்சுமியின் ரூபம்.
எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன் நாம் விநாயகரை வழிபடுவது வெற்றியைத் தரும். விநாயகர் கைகளில் மங்கள சின்னமாக சுவஸ்திக் இருக்கிறது. எனவே ,அவர் கைகளில் உள்ள இந்த ஸ்வஸ்திக் சின்னம் வெற்றியின் சின்னம்.
"ஸ்வஸ்திக் "என்றால் தடையற்ற வாழ்வு .ஓம், ஸ்வஸ்திக் போன்ற சின்னங்களை வீட்டு வாசல் கதவுகளில் ஒட்டி வைக்கலாம் .திருஷ்டி தோஷம் துஷ்ட சக்திகள் வீட்டுக்குள் வராமல் தடுக்கும் என்று கருதப்படுகிறது. வீட்டின் அமைதியும், நிம்மதியும் நிலவ ,மகிழ்ச்சி செழிப்பு உண்டாகும். வாகனங்களில் ஸ்வஸ்திக் சின்னம் வரைவதால் வாகன பாதுகாப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
ஸ்வஸ்திக் சின்னத்திற்கு 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாறு இருப்பதாக கூறப்படுகிறது. இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸ்வஸ்திக் சின்னம் பௌத்தம் மற்றும் ஜெயின மதங்களில் பயன்படுத்தப்படுகிறது. பல நாடுகளில் புனிதமாக கருதப்படுகிறது.
இது பூமி, நெருப்பு ,நீர் மற்றும் வானம் ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது ."ஓம்" என்பதற்குப் பிறகு மிக முக்கியமான சின்னம் சுவஸ்திகா .இது வாழ்க்கை சுழற்சியை குறிக்கிறது. இந்த ஸ்வஸ்திக் வடிவத்தில் நான்கு அறைகள் சொர்க்கம், நரகம், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளில் உள்ள கோவில்களில் ஸ்வஸ்திகா சின்னம் காணப்படுகிறது. இந்த சின்னம் இந்து மதத்தில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது என்று ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தினர்.
ஸ்வஸ்திக் சின்னம் எங்கு வரையலாம்:
பூஜை அறையில் கோலமாக ஸ்வஸ்திக் சின்னத்தை வரைவது சிறப்பு . வீட்டின் முன்புறத்தில் இடதுபுறம் அல்லது வலது புறம் கதவுகளில் வரையலாம் அல்லது சின்ன ஸ்டிக்கர்களை பதிக்கலாம். தொழிற்சாலைகளில், கணக்கு புத்தகங்கள் புனித நூல்கள், கடைகள் போன்றவற்றில் வரையலாம் . திருமண சடங்குகள் மற்றும் பிற மங்கள நிகழ்வுகளில் வரைவது சுபிட்சம் தரும். *வாஸ்துபடி ஸ்வஸ்திக் வீட்டில் நேர்மறை ஆற்றலை அழைக்க வரையப்படுகிறது.
வேத மந்திரங்கள் உச்சரிக்கும் போது" ஓம்" என்ற ஒலிக்குப் பிறகு ஸ்வஸ்திக் என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு வேலையில் தடைகள் வரக்கூடாது என்ற பொருளில் இந்த வார்த்தை உச்சரிக்கப்படுகிறது. வீட்டு வாசலில் ஸ்வஸ்திக் கோலம் இட்டால் கால்மிதி படாமல் இருப்பது நல்லது. எனவே துளசி மடம் இருக்கும் இடங்களில் பூஜை அறைகளில் சுவஸ்திக் வரைவது மிகவும் நல்லது. பூஜை அறையில் அரிசி மாவினால் வரைந்து மஞ்சள் குங்குமம் வைப்பது நன்மை பயக்கும்.
சிறப்புகள்:
ஸ்வஸ்திக் எதை குறிக்கிறது என்று பார்ப்போமா.... செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வல மாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். இதில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும்.
ஸ்வஸ்திக் உணர்த்துவது யாதெனில் நான்கு வேதங்கள் :ரிக், யஜுர், சாம அதர்வணம்.
நான்கு திசைகள் :வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு.
நான்கு யோகங்கள்: ஞானம் ,பக்தி ,கர்ம ராஜ யோகம். நான்கு மூலங்கள் ஆகாயம் ,வாயு, நீர் ,நிலம்.
இந்த மங்களகரமான அதிர்ஷ்டமான செல்வ செழிப்பை குறிக்கும் "ஸ்வஸ்திக் "சின்னத்தை வீடுகளில் வரைந்து செழிப்புடனும் ,மன அமைதியுடனும் சிறப்பாக வாழ்வோமாக .மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!
புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!
கருவறை முதல் கல்லறை வரை... அலட்சியமும் ஊழலும் மலிந்து போன திமுக அரசு: தவெக
ஸ்வஸ்திக் சின்னம்.. அதிர்ஷ்டம், மங்கலம் மற்றும் செழிப்பின் அடையாளம்!
AI-யிலும் வடிவேலுதான் கிங்கு.. எங்க பார்த்தாலும் அந்தக் குண்டுப் பையன்தான் உருண்டுட்டிருக்கான்!
சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்
அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}