சுவிட்சர்லாந்தில் முகத்தை மறைக்கும் புர்கா அணிய தடை.. புத்தாண்டிலிருந்து அமலுக்கு வந்த சட்டம்

Jan 03, 2025,06:55 PM IST

ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் முகத்தை மறைக்கும் வகை புர்கா ஆடைகள் அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய உத்தரவு ஜனவரி 01ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கு வகையிலான உடைய அணிய தடை விதிப்பது குறித்து 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தடை உத்தரவிற்கு ஆதரவு தெரிவித்து அதிகமானவர்கள் ஓட்டளித்திருந்தனர். இந்நிலையில் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 




இந்த புதிய சட்டத்தின் படி, விமானங்கள், தூதரக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், பிற புனித தலங்கள், மசூதிகள் போன்ற இடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு உடல்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


ஆனால் மத ரீதியாகவோ, அல்லது தட்பவெப்ப நிலை காரணமாகவோ முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தடையை மீறுபவர்களுக்கு உடனடியாக 1000 சுவிஸ் பிராங்க்ஸ், அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு செலுத்த மறுப்பு தெரிவித்தால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராம் சரண் புது முடிவு... டெல்லியில் இப்போது ஷூட்டிங் வேண்டாம்.. ராஷ்மிகா படமும் ஒத்திவைப்பு

news

ஆம்னி உரிமையாளர்களுடன் உடனடியாக பேச்சு நடத்துக : எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை!

news

ஓமவள்ளி தெரியுமா இந்த ஓமவள்ளி.. அதாங்க கற்பூரவள்ளி.. குட்டீஸ் முதல் பெரியவர் வரை.. சூப்பர் மருந்து!

news

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

news

பாகிஸ்தானை விட்டு வரக் கூடாது.. இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாரியம் அதிரடி உத்தரவு

news

இந்தியா முழுக்க.. 8 இடங்களில் குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த சதிகாரர்கள்.. பரபர தகவல்

news

டெல்லி சம்பவம்...வெடி பொருள் நிரம்பிய 2வது கார் எங்கே? தீவிரமாகும் தேடுதல் வேட்டை

news

டில்லி தாக்குதல் பின்னணியில் நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

news

SIR.. வாங்கிய படிவங்களை நிரப்பத் தெரியாமல்.. விழிக்கும் மக்கள்.. திரும்பப் பெறுவதில் குழப்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்