ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் முகத்தை மறைக்கும் வகை புர்கா ஆடைகள் அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய உத்தரவு ஜனவரி 01ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கு வகையிலான உடைய அணிய தடை விதிப்பது குறித்து 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தடை உத்தரவிற்கு ஆதரவு தெரிவித்து அதிகமானவர்கள் ஓட்டளித்திருந்தனர். இந்நிலையில் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் படி, விமானங்கள், தூதரக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், பிற புனித தலங்கள், மசூதிகள் போன்ற இடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு உடல்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத ரீதியாகவோ, அல்லது தட்பவெப்ப நிலை காரணமாகவோ முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறுபவர்களுக்கு உடனடியாக 1000 சுவிஸ் பிராங்க்ஸ், அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு செலுத்த மறுப்பு தெரிவித்தால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்
{{comments.comment}}