ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் முகத்தை மறைக்கும் வகை புர்கா ஆடைகள் அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய உத்தரவு ஜனவரி 01ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கு வகையிலான உடைய அணிய தடை விதிப்பது குறித்து 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தடை உத்தரவிற்கு ஆதரவு தெரிவித்து அதிகமானவர்கள் ஓட்டளித்திருந்தனர். இந்நிலையில் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் படி, விமானங்கள், தூதரக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், பிற புனித தலங்கள், மசூதிகள் போன்ற இடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு உடல்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத ரீதியாகவோ, அல்லது தட்பவெப்ப நிலை காரணமாகவோ முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறுபவர்களுக்கு உடனடியாக 1000 சுவிஸ் பிராங்க்ஸ், அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு செலுத்த மறுப்பு தெரிவித்தால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}