தைபே: தைவானைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்களுக்கு போனஸாக, நான்கு வருட சம்பளத்தை மொத்தமாக கொடுத்து அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தைவானைச் சேர்ந்த எவர்கிரீன் மெரைன் கார்ப்பரேஷன் என்ற ஷிப்பிங் நிறுவனத்தில், வருடக் கடைசியில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை ஊழியர்கள் எதிர்பாராத வகையிலான போனஸைக் கொடுத்து அந்த நிறுவனம் அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. அதாவது 50 மாத சம்பளத்தை அப்படியே போனஸாக கொடுத்துள்ளது அந்த நிறுவனம். இது 4 வருட சம்பளத்திற்குச் சமமாகும்.
அதேசமயம், மொத்த ஊழியர்களுக்கும் இந்த போனஸ் தரப்படவில்லை. மாறாக தைவானைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டும் இது தரப்பட்டுள்ளதாம். யாருக்கெல்லாம் போனஸ் தரப்பட்டது என்ற விவரத்தையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
கடந்த இரண்டு வருடமாக இந்த நிறுவனம் நல்ல லாபம் ஈட்டி வருகிறதாம். கொரோனா காரணமாக தொய்வடைந்திருந்த நிறுவனத்தின் வர்த்தகம் தற்போது சூடு பிடித்திருப்பதால் வருமானமும் அதிகரித்துள்ளது. இதனால் அதன் பலனை ஊழியர்களுக்குக் கொடுத்துள்ளது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் வருவாய் 20.7 பில்லியன் டாலராக இருந்ததாக கூறப்படுகிறது. இது 2020ம் ஆண்டை விட 3 மடங்கு அதிகமாகும்.
சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}