தைபே: தைவானைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்களுக்கு போனஸாக, நான்கு வருட சம்பளத்தை மொத்தமாக கொடுத்து அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தைவானைச் சேர்ந்த எவர்கிரீன் மெரைன் கார்ப்பரேஷன் என்ற ஷிப்பிங் நிறுவனத்தில், வருடக் கடைசியில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை ஊழியர்கள் எதிர்பாராத வகையிலான போனஸைக் கொடுத்து அந்த நிறுவனம் அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. அதாவது 50 மாத சம்பளத்தை அப்படியே போனஸாக கொடுத்துள்ளது அந்த நிறுவனம். இது 4 வருட சம்பளத்திற்குச் சமமாகும்.
அதேசமயம், மொத்த ஊழியர்களுக்கும் இந்த போனஸ் தரப்படவில்லை. மாறாக தைவானைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டும் இது தரப்பட்டுள்ளதாம். யாருக்கெல்லாம் போனஸ் தரப்பட்டது என்ற விவரத்தையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
கடந்த இரண்டு வருடமாக இந்த நிறுவனம் நல்ல லாபம் ஈட்டி வருகிறதாம். கொரோனா காரணமாக தொய்வடைந்திருந்த நிறுவனத்தின் வர்த்தகம் தற்போது சூடு பிடித்திருப்பதால் வருமானமும் அதிகரித்துள்ளது. இதனால் அதன் பலனை ஊழியர்களுக்குக் கொடுத்துள்ளது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் வருவாய் 20.7 பில்லியன் டாலராக இருந்ததாக கூறப்படுகிறது. இது 2020ம் ஆண்டை விட 3 மடங்கு அதிகமாகும்.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}