தைபே: தைவானைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்களுக்கு போனஸாக, நான்கு வருட சம்பளத்தை மொத்தமாக கொடுத்து அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தைவானைச் சேர்ந்த எவர்கிரீன் மெரைன் கார்ப்பரேஷன் என்ற ஷிப்பிங் நிறுவனத்தில், வருடக் கடைசியில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை ஊழியர்கள் எதிர்பாராத வகையிலான போனஸைக் கொடுத்து அந்த நிறுவனம் அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. அதாவது 50 மாத சம்பளத்தை அப்படியே போனஸாக கொடுத்துள்ளது அந்த நிறுவனம். இது 4 வருட சம்பளத்திற்குச் சமமாகும்.
அதேசமயம், மொத்த ஊழியர்களுக்கும் இந்த போனஸ் தரப்படவில்லை. மாறாக தைவானைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டும் இது தரப்பட்டுள்ளதாம். யாருக்கெல்லாம் போனஸ் தரப்பட்டது என்ற விவரத்தையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
கடந்த இரண்டு வருடமாக இந்த நிறுவனம் நல்ல லாபம் ஈட்டி வருகிறதாம். கொரோனா காரணமாக தொய்வடைந்திருந்த நிறுவனத்தின் வர்த்தகம் தற்போது சூடு பிடித்திருப்பதால் வருமானமும் அதிகரித்துள்ளது. இதனால் அதன் பலனை ஊழியர்களுக்குக் கொடுத்துள்ளது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் வருவாய் 20.7 பில்லியன் டாலராக இருந்ததாக கூறப்படுகிறது. இது 2020ம் ஆண்டை விட 3 மடங்கு அதிகமாகும்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}