தனுஷ், விஷால், சிம்புவுக்கு ரெட் கார்டு?... அதிரடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம்

Sep 15, 2023,02:48 PM IST

சென்னை : தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான தனுஷ், விஷால், சிம்பு மற்றும் அதர்வா ஆகியோருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய பேச்சுக்கள் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர்கள் மீது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்துள்ளது.  இந்த புகார்கள் தொடர்பாக சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா,அதர்வா, யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜூன் மாதமே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், இதே போன்று தொடர்ந்து புகார்கள் வந்தாலோ, தயாரிப்பாளர்கள் உடனான பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் ரெட் கார்டு விதிக்கப்படும், கோலிவுட் தயாரிப்பாளர்கள் யாருடனும் பணியாற்ற தற்காலிகமாக தடை விதிக்கப்படும் என்பத உள்ளிட்ட பல எச்சரிக்கைகள் அந்த நோட்டீசில் இடம்பெற்றுள்ளது. 


ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள் சார்பில் பெரிதாக எந்த ரியாக்ஷனும் இல்லை என சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன் ரெட் கார்டு விதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 


அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் போது 60 நாட்கள் நடிப்பதாக சொல்லி விட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்து கொடுத்ததாக சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தற்போது வரை சரி செய்யப்படாதது தொடர்பாக தற்போது சிம்புவிற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


இதே போல் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தில் ஒப்புக் கொண்டது போல் படத்தை முடித்து கொடுக்காமல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தனுஷிற்கும், நடிகர் சங்க தலைவராக இருந்த காலத்தில் சங்கத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக விஷாலுக்கும், தயாரிப்பாளர் மதியழகன் விவகாரம் தொடர்பாக அதர்வாவிற்கும் ரெட் கார்டு போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.


இப்போது இந்த நடிகர்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் முடியும் வரை அந்த நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் செய்யப்படாது. இவர்கள் புதிய படங்கள் எதிலும் நடிக்கவும் முடியாது. விஷால் நடித்த மார்க் ஆன்டனி படம் செப்டம்பர் 15 ம் தேதியான இன்றும், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் 15 ம் தேதியும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ரெட் கார்டு விவகாரத்தால் இந்த படங்களில் ரிலீஸ் என்ன ஆகும் என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்