10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும்.. அரசு அறிவிப்பு

May 08, 2024,06:36 PM IST

சென்னை: எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் மே 6ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் மே 10ம் தேதி வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் காணலாம்.


http://tnresults.nic.in

http://dge.tn.gov.in

https://results.digilocker.gov.in 



மார்ச் 26ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. 100க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்ட நிலையில் தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்து நாளை மறு நாள் முடிவு வெளியாகவுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சம்  மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்.


இதைத் தொடர்ந்து மே 14ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?

news

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்

news

ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்

news

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு

news

நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

தொடக்கம்!

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்