சென்னை: எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 6ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் மே 10ம் தேதி வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் காணலாம்.
https://results.digilocker.gov.in

மார்ச் 26ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. 100க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்ட நிலையில் தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்து நாளை மறு நாள் முடிவு வெளியாகவுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மே 14ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}