சென்னை: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பிய செயல் தவறான செயல், ஏற்புடையதல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட 10 சட்ட முன்வடிவுகளை ஆளுநர் ஆர். என். ரவி சமீபத்தில் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து மீண்டும் அதே சட்ட முன்வடிவுகளை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றி மறுபடியும் ஆளுநருக்கே திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதற்காக, சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார். மறைந்த ஆன்மீகவாதி பங்காரு அடிகளார் மற்றும் மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதேபோல மறைந்த உறுப்பினர்கள் குறித்தும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து சட்டசபையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
.jpg)
அதன் பின்னர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் பின்னர் உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தின் மீது பேசினர்.
இன்றைய சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் விவரம்:
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக உருவாக்கம் தொடர்பான மசோதா
அண்ணா பல்கலைக்கழ சட்டத் திருத்த மசோதா
சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மசோதா
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}