- மஞ்சுளா தேவி
சென்னை: சினிமா பாணியில் களம் குதித்துள்ளது தமிழ்நாடு பாஜக. முன்பு திமுக பைல்ஸ் என்ற பெயரில் ஒன்றை கையில் எடுத்தது.. தற்போது பாவக் கதைகள் பாணியில் தீமைக் கதைகள் என்ற ஒரு புதிய அஸ்திரத்தை இன்று மாலை ஏவப் போகிறது.
இதற்காக அந்நியன் படப் பாணியில் ஒரு அட்டகாசமான டீசரையும் அது வெளியிட்டுள்ளது.
அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக வந்தது முதலே திமுகவை கடுமையாக தாக்கி வருகிறார். திடீர் திடீரென அதிமுகவுக்கும் ஒரு கும்மாங்குத்து விடுவார். அவரது அரசியலால் திமுக மட்டுமல்லாமல் அதிமுகவும் கூட சேர்ந்தே கடுப்பாகி வந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திமுக பைல்ஸ் என்ற பெயரில் ஒரு ஊழல் பட்டியலை அவர் வெளியிட்டார். அதாவது திமுக தலைவர்களின் சொத்துக்கள் குறித்த பட்டியல் அது.

ஆனால் அண்ணாமலை, திமுக மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அடுக்குவதாக புகார் எழுந்தது. நடைபயணம் ஆரம்பிக்கும் முன்பு திமுக பைல்ஸ் பட்டியலை வெளியிட்டிருந்தார் அண்ணாமலை. இந்த பட்டியல் வெளியீட்டைத் தொடர்ந்து திமுக எம்பி டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கை தொடர்ந்தார்.
திமுகவைப் போலவே அதிமுக ஊழல்களையும் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. ஆனால் இதுவரை அவர் வெளியிடவில்லை. அதை வெளியிட மேலிடம் அனுமதி தரவில்லை என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் தற்போது புதிதாக இன்னொரு சினிமா பாணி பட்டியலுடன் தமிழ்நாடு பாஜக களம் இறங்குகிறது.
இந்தப் "படத்துக்கு" தீமை கதைகள் சீசன் 1 என்று பெயரிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒரு டீசரையும் வெளியிட்டுள்ளனர். அந்நியன் படத்தில் வருவதைப் போன்ற வேடத்தில் ஒருவர் வந்து முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று ஆரம்பித்து திமுக அரசு குறித்துப் பேசுகிறார்.. இன்று மாலை 6 மணிக்கு இந்த வீடியோ வெளியாகவுள்ளதாம்.
இந்த வீடியோவில் பாஜக அரசு திமுகவைப் பற்றி என்ன சொல்ல போகிறது என்ற ஆர்வம் மக்களிடையே எழுந்து வருகிறது. இதற்கு முன்பு வெளியிட்ட திமுக பைல் பட்டியல் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை ,
தீமை கதைகள் சீசன் 1 எந்த அளவிற்கு உதவும் என்பதும் தெரியவில்லை. நாமளும் பொறுத்திருந்து பார்ப்போம்.
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
{{comments.comment}}