சென்னை: புதிய தமிழ்நாடு பாஜக தலைவரை தேர்வு செய்ய வருகிற 17ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி.
பாஜகவின் உட்கட்சி தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். அந்த வகையில், தற்போது பாஜக கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமனம் செய்திருக்கிறது.

தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக வருகிற 17ம் தேதி சென்னை வருகிறார் கிஷன் ரெட்டி என தகவல்கள் பரவி வருகின்றன. கிஷன் ரெட்டி மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு புதிய தலைவர் யார் என்பதனை பாஜக தலைமைக்கு தெரிவிப்பார் என்றும், அதன்பின்னர் புதிய தலைவர் யார் என்பது தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தான் பாஜக தமிழக தலைவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நயினார் நாகேந்திரன் அல்லது வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போதைய தலைவராக இருக்கும் அண்ணாமலை மீண்டும் தலைவராக தொடர்வது குறித்து, தேசிய தலைமை இன்னும் முடிவு தெரிவிக்காமல் உள்ளது.
தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவிற்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து வருவதால், அண்ணாமலை அடுத்த தலைவராக இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. அதேசமயம், தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவரை மாற்ற வேண்டுமானால், அவரை விட அதிக தாக்கத்தைத் தரக் கூடியவரையே புதிய தலைவராக்க முடியும் என்ற நெருக்கடியும் உள்ளது.
புதிய தலைவரை வைத்து தான் அதிமுகவுடன் பாஜக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}