சென்னை: புதிய தமிழ்நாடு பாஜக தலைவரை தேர்வு செய்ய வருகிற 17ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி.
பாஜகவின் உட்கட்சி தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். அந்த வகையில், தற்போது பாஜக கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமனம் செய்திருக்கிறது.
தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக வருகிற 17ம் தேதி சென்னை வருகிறார் கிஷன் ரெட்டி என தகவல்கள் பரவி வருகின்றன. கிஷன் ரெட்டி மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு புதிய தலைவர் யார் என்பதனை பாஜக தலைமைக்கு தெரிவிப்பார் என்றும், அதன்பின்னர் புதிய தலைவர் யார் என்பது தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தான் பாஜக தமிழக தலைவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நயினார் நாகேந்திரன் அல்லது வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போதைய தலைவராக இருக்கும் அண்ணாமலை மீண்டும் தலைவராக தொடர்வது குறித்து, தேசிய தலைமை இன்னும் முடிவு தெரிவிக்காமல் உள்ளது.
தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவிற்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து வருவதால், அண்ணாமலை அடுத்த தலைவராக இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. அதேசமயம், தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவரை மாற்ற வேண்டுமானால், அவரை விட அதிக தாக்கத்தைத் தரக் கூடியவரையே புதிய தலைவராக்க முடியும் என்ற நெருக்கடியும் உள்ளது.
புதிய தலைவரை வைத்து தான் அதிமுகவுடன் பாஜக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}