சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் காளைகள் சீறிப் பாய, எதிர்கொண்டு அடக்கினர் வீர இளைஞர்கள்.
தமிழர்கள் கொண்டாடும் மாபெரும் பண்டிகை பொங்கல் திருநாள். இன்று தைப்பொங்கல் திருநாள் தமிழ்நாடு முழுவதும் களை கட்டியிருந்தது. காலையிலேயே சூரியனுக்குப் பொங்கல் வைத்து மக்கள் கோலாகலமாக பண்டிகையை கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அலை மோதியது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வழக்கம் போல விமரிசையாக நடந்தது. 800க்கும் மேற்பட்ட காளைகள் இதில் தகுதி பெற்று பங்கேற்றன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உரிய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு போட்டியில் பங்கேற்றனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது குடும்பத்தினரோடு வந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்தார். அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்பி சு. வெங்கடேசன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு உறுதிமொழியும் வாசித்து, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னரே போட்டி தொடங்கியது.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}