வயநாடு நிலச்சரிவு... தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி உதவி.. செல்வப் பெருந்தகை அறிவிப்பு

Jul 31, 2024,07:55 PM IST

சென்னை: கேரள வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.ஒரு கோடி நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.


இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேரள மாநிலம்,வயநாட்டில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதிக  கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு 160க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.  இந்த இயற்கை சீற்றத்தின் பேரிழப்பை வயநாடு மக்கள் சந்தித்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தொடர்ந்து 300 பேரை காணவில்லை என்று தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரக்கலை தெரிவித்து கொள்கிறோம்.




மீட்புப் பணியை  ஒன்றிய அரசு முடுக்கி விட வேண்டும். இழப்பீடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அதிகளவில் இழப்பிடுகளை தர வேண்டும். மண்மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தமிழ்நாடு அரசின் சார்பாக 5 கோடி ரூபாயை நிவாரணத்திற்கு அளித்து இருக்கிறார். அவருக்கு பாராட்டுதலையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக ரூபாய் ஒரு கோடியை துயர் துடைப்பதற்கு வயநாடு மக்களுக்கு உதவுவதற்கு எங்கள் தலைவர் ராகுல் காந்தி சார்பாக அளிக்க இருக்கிறோம். 


பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு வயநாடு மாவட்டத்திற்கு அருகில் உள்ள நீலகிரரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஊட்டி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினருமான ஆர்.கணேஷ் ஏற்பாட்டில் கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 80 பேர் கொண்ட மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?

news

கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்

news

கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!

news

பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி

news

யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!

news

ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்