இலங்கை படகு மோதி தமிழ்நாட்டு மீனவர் பலி.. தூதரை நேரில் அழைத்து கண்டித்த மத்திய அரசு!

Aug 01, 2024,05:04 PM IST

டெல்லி: இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்தது தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை பொறுப்பு தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.


ராமேஸ்வரத்தில் இருந்து 400 விசைப்படகுகளில் 2000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தமிழக மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர்  ரோந்து வந்துள்ளனர். இலங்கை கடற்படையினரை கண்டதும் தமிழக மீனவர்கள் விசைபடகுகளை கரைக்கு வேகமாக திருப்பியுள்ளனர். அப்போது  மீனவர்களின் விசைப்படகுகளை  இலங்கை கடற்படையினர் விடாது துரத்தி வந்துள்ளனர்.




இதில், கார்த்திகேயன் என்பவரது படகு மீது இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில், கார்த்திகேயனின் படகு முழுவதும் நடுக்கடலில் மூழ்கியது.  கார்த்திகேயன் படகில் சென்ற 4 பேரில். மலைச்சாமி என்பவர் கடலில் மூழ்கி இறந்துள்ளார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாயமான ராமச்சந்திரனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலால், தமிழக மீனவர்கள் உயிரிழந்து இருப்பதாக மத்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், உயிர் இழந்த மீனவர் மற்றும் காயம் அடைந்து காங்கேசன் துறையில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யவும் அறிவுறுத்தல் செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்