சென்னை: சென்னை கடற்கரை உழைப்பாளர்சிலை அருகே நடந்த குடியரசு தின விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காவல் துறை அணிவகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
சென்னையில் வழக்கமாக மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தினவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக, உழைப்பாளர் சிலை அருகே இந்த ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இன்று காலை 7.25 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்குப் பின்னர் சிறிது நேரத்தில்ஆளுநர் ஆர். என்.ரவி வந்தார். ஆளுநர் வந்ததும், முதலில் காவல்துறை அணிவகுப்புமரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டார் ஆளுநர். அதன் பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகளை ஆளுநருக்கு முதல்வர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதையடுத்து தேசியக் கொடி ஏற்றும் வைபவம் நடந்தது. ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தபோது வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. இதைத் தொடர்ந்து அணிவகுப்புகள் தொடங்கின. முப்படையினர் அணிவகுப்புக்குப் பின்னர் பல்வேறு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}