சென்னை: சென்னை கடற்கரை உழைப்பாளர்சிலை அருகே நடந்த குடியரசு தின விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காவல் துறை அணிவகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
சென்னையில் வழக்கமாக மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தினவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக, உழைப்பாளர் சிலை அருகே இந்த ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இன்று காலை 7.25 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்குப் பின்னர் சிறிது நேரத்தில்ஆளுநர் ஆர். என்.ரவி வந்தார். ஆளுநர் வந்ததும், முதலில் காவல்துறை அணிவகுப்புமரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டார் ஆளுநர். அதன் பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகளை ஆளுநருக்கு முதல்வர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதையடுத்து தேசியக் கொடி ஏற்றும் வைபவம் நடந்தது. ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தபோது வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. இதைத் தொடர்ந்து அணிவகுப்புகள் தொடங்கின. முப்படையினர் அணிவகுப்புக்குப் பின்னர் பல்வேறு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}