சென்னை: சென்னை கடற்கரை உழைப்பாளர்சிலை அருகே நடந்த குடியரசு தின விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காவல் துறை அணிவகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

சென்னையில் வழக்கமாக மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தினவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக, உழைப்பாளர் சிலை அருகே இந்த ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இன்று காலை 7.25 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்குப் பின்னர் சிறிது நேரத்தில்ஆளுநர் ஆர். என்.ரவி வந்தார். ஆளுநர் வந்ததும், முதலில் காவல்துறை அணிவகுப்புமரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டார் ஆளுநர். அதன் பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகளை ஆளுநருக்கு முதல்வர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதையடுத்து தேசியக் கொடி ஏற்றும் வைபவம் நடந்தது. ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தபோது வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. இதைத் தொடர்ந்து அணிவகுப்புகள் தொடங்கின. முப்படையினர் அணிவகுப்புக்குப் பின்னர் பல்வேறு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}