சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இதுவரை நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
திருப்பி அனுப்பியுள்ள பத்து மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கே அனுப்ப தமிழ்நாடசு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சனிக்கிழமையன்று சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு நிலவி வருகிறது. இது நாளுக்கு நாள் முற்றி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

குறிப்பாக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மிகப் பெரிய அலட்சியம் காட்டுகிறார், தாமதம் செய்கிறார், ஒப்புதல் தர மறுக்கிறார், நிராகரிக்கிறார், திருப்பி அனுப்புகிறார் என்ற புகாரை திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில்தான் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அ ரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது. ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது தவறானது. ஒன்று ஒப்புதல் தர வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்து விட வேண்டும். தமிழ்நாடு அரசு கூறியுள்ள புகார்கள் அனைத்தும் தீவிரமானவை, கவலைக்குரியவை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தற்போது தன் வசம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை தமிழ்நாடு அரசிடமே விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக சனிக்கிழமையே சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிகிறது.
இப்படித்தான் நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவையும் தமிழ்நாடு அரசிடம் திருப்பி அனுப்பினார் ஆளுநர். அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. அதன் பிறகு அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். மசோதாக்களை மாநில அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
10 மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளதால் மீண்டும் ஆளுநர் - திமுக அரசு இடையிலான மோதல் மீண்டும் வலுப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}