10 மசோதாக்களை தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர். என். ரவி!

Nov 16, 2023,12:38 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இதுவரை நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.


திருப்பி அனுப்பியுள்ள பத்து மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கே அனுப்ப தமிழ்நாடசு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சனிக்கிழமையன்று சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.


தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு நிலவி வருகிறது. இது நாளுக்கு நாள் முற்றி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. 




குறிப்பாக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மிகப் பெரிய அலட்சியம் காட்டுகிறார், தாமதம் செய்கிறார், ஒப்புதல் தர மறுக்கிறார், நிராகரிக்கிறார், திருப்பி அனுப்புகிறார் என்ற புகாரை திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.


இந்த நிலையில்தான் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அ ரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது.  ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது தவறானது. ஒன்று ஒப்புதல் தர வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்து விட வேண்டும். தமிழ்நாடு அரசு கூறியுள்ள புகார்கள் அனைத்தும் தீவிரமானவை, கவலைக்குரியவை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


இந்த நிலையில் தற்போது தன் வசம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை தமிழ்நாடு அரசிடமே விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக சனிக்கிழமையே சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிகிறது.


இப்படித்தான் நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவையும் தமிழ்நாடு அரசிடம் திருப்பி அனுப்பினார் ஆளுநர். அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. அதன் பிறகு அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். மசோதாக்களை மாநில அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


10 மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளதால் மீண்டும் ஆளுநர் - திமுக அரசு இடையிலான மோதல் மீண்டும் வலுப் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!

news

எங்க வீட்டுக் குலதெய்வம் வீரப்பன்.. செம்மண்ணை எடுத்து வந்து.. 25 பிள்ளையார் பிடித்து!

news

அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!

news

கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி

news

தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

news

India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

news

T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

news

இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!

news

ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்