10 மசோதாக்களை தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர். என். ரவி!

Nov 16, 2023,12:38 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இதுவரை நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.


திருப்பி அனுப்பியுள்ள பத்து மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கே அனுப்ப தமிழ்நாடசு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சனிக்கிழமையன்று சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.


தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு நிலவி வருகிறது. இது நாளுக்கு நாள் முற்றி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. 




குறிப்பாக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மிகப் பெரிய அலட்சியம் காட்டுகிறார், தாமதம் செய்கிறார், ஒப்புதல் தர மறுக்கிறார், நிராகரிக்கிறார், திருப்பி அனுப்புகிறார் என்ற புகாரை திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.


இந்த நிலையில்தான் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அ ரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது.  ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது தவறானது. ஒன்று ஒப்புதல் தர வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்து விட வேண்டும். தமிழ்நாடு அரசு கூறியுள்ள புகார்கள் அனைத்தும் தீவிரமானவை, கவலைக்குரியவை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


இந்த நிலையில் தற்போது தன் வசம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை தமிழ்நாடு அரசிடமே விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக சனிக்கிழமையே சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிகிறது.


இப்படித்தான் நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவையும் தமிழ்நாடு அரசிடம் திருப்பி அனுப்பினார் ஆளுநர். அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. அதன் பிறகு அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். மசோதாக்களை மாநில அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


10 மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளதால் மீண்டும் ஆளுநர் - திமுக அரசு இடையிலான மோதல் மீண்டும் வலுப் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்