சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தர மாட்டேன் என்று ஆளுநர் ஆர். என். ரவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Never Ever என்று அவர் உரத்த குரலில் கூறியதால் பரபரப்பு கூடியது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு சட்டசபையில் இயற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அந்த மசோதாவுக்கு விளக்கம் கேட்டு கடந்த ஜனவரி மாதம் அதை தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார் ஆளுநர். இருப்பினும் தமிழ்நாடு அரசு அந்த மசோதாவை மீண்டும் சட்டசபையில் இயற்றி ஆளுநருக்கே அனுப்பி வைத்தது. இந்த மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுடன் கலந்துரையாடினார் ஆளுநர் ஆர்.என். ரவி. அப்போது சேலத்தைச் சேர்ந்த ஒரு தந்தை எழுந்து, உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு தேர்வு மசோதாவில் எப்போது கையெழுத்து போடுவீர்கள் என்று கேட்டார்.
இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டெ�� சுதாரித்துக் கொண்டு, நீட் விலக்கு தேர்வு மசோதாவில் நான் கையெழுத்து போட மாட்டேன்.. Never Ever என்று கூறினார். தொடர்ந்து அந்தத் தந்தை ஏன் போட மாட்டீர்கள்.. நீட் தேர்வு இல்லாமலேயே எங்களது மாணவர்கள் சிறந்து விளங்கினார்கள். சிறந்த கல்வியை தமிழ்நாடு கொடுக்கிறது. மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு மாணவர்கள் சிறந்து விளங்கி வந்துள்ளனர் என்று பேசினார்.
அவரது கேள்விகளுக்கு தொடர்ந்து உரத்த குரலில் பதிலளித்தபடி இருந்தார் ஆளுநர். "நீட் தேர்வுகளுக்காக பயிற்சி மையங்களுக்குப் போக வேண்டியதில்லை. சிபிஎஸ்இ படிப்பை படித்தாலே, அதில் தேர்ச்சி பெற்றாலே வெல்லமுடியும். நீட் தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் போட்டித் திறன் பாதிக்கப்படும். அதை நான் விரும்பவில்லை. எனக்கு இறுதி அதிகாரம் இருந்தால் நிச்சயம் நீட் எதிர்ப்பு மசோதாவை நான் அனுமதிக்க மாட்டேன் என்றார் ஆளுநர் ஆர். என். ரவி.
இருவருக்கும் இடையே கடும் விவாதம் நடந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அந்த தந்தையிடமிருந்து மைக் திரும்பப் பெறப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த உரையாடல் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேசமயம், பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}