சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார். அவரது பதவி நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக இருந்து வருகிறார் ஆர்.என். ரவி. இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். பதவி ஓய்வுக்குப் பின்னர் முதலில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நாகாலாந்து மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றார். 2021 செப்டம்பர் 9ம் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். அதன் பின்னர் தமிழ்நாட்டுக்கு அவர் மாற்றப்பட்டார். அவரது பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக அவர் வந்தது முதல் அவருக்கும், திமுக தலைமையிலான அரசுக்கும் இடையே ஏகப்பட்ட முட்டல் மோதல்கள் இருந்து வந்தன. இதன் உச்சமாக தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் பேச்சின் மீது தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே வெளிநடப்பு செய்த சம்பவத்தையும் நாடு கண்டது.
இந்த நிலையில் மத்தியில் கூட்டணி ஆட்சியை பாஜக அமைத்துள்ளது. மாநிலத்திலும் ஆளுநர் ரவியின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. ஆனால் புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை.
இந்த நிலையில் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளார் ஆளுநர் ரவி. டெல்லியில் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார். பிரதமர் மோடியையும் அவர் சந்திப்பாரா என்று தெரியவில்லை. மறுபக்கம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றே டெல்லி போயுள்ளார். இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டா அல்லது இருவரும் தனித் தனி காரணங்களுக்காக டெல்லி சென்றுள்ளனரா என்று தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}