சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி டெல்லிக்கு புறப்பட்டுப் போயுள்ளார். இன்று காலை விமானத்தில் அவர் டெல்லி கிளம்பிச் சென்றார்.
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் 12ம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு தனது உரையை முழுமையாக படிக்கவில்லை. தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்த அவர் படிக்காமல் அமர்ந்து விட்டார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார்.
தனது பேச்சின் முடிவில் ஆளுநர் குறித்து சபாநாயகர் கூறிய கருத்துக்களாலும், தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதாலும் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர். என். ரவி, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்து வெளியேறினார்.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தப் பின்னணியில் இன்று காலை ஆளுநர் ஆர். என். ரவி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் நான்கு நாட்கள் டெல்லியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது முக்கியமாக அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில்தான் டெல்லிக்குச் சென்று திரும்பினார் ஆளுநர். ஒரே மாதத்தில் அவர் 2வது முறையாக டெல்லிக்குச் செல்வது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}