சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி டெல்லிக்கு புறப்பட்டுப் போயுள்ளார். இன்று காலை விமானத்தில் அவர் டெல்லி கிளம்பிச் சென்றார்.
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் 12ம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு தனது உரையை முழுமையாக படிக்கவில்லை. தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்த அவர் படிக்காமல் அமர்ந்து விட்டார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார்.
.jpg)
தனது பேச்சின் முடிவில் ஆளுநர் குறித்து சபாநாயகர் கூறிய கருத்துக்களாலும், தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதாலும் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர். என். ரவி, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்து வெளியேறினார்.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தப் பின்னணியில் இன்று காலை ஆளுநர் ஆர். என். ரவி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் நான்கு நாட்கள் டெல்லியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது முக்கியமாக அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில்தான் டெல்லிக்குச் சென்று திரும்பினார் ஆளுநர். ஒரே மாதத்தில் அவர் 2வது முறையாக டெல்லிக்குச் செல்வது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}