சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி டெல்லிக்கு புறப்பட்டுப் போயுள்ளார். இன்று காலை விமானத்தில் அவர் டெல்லி கிளம்பிச் சென்றார்.
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் 12ம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு தனது உரையை முழுமையாக படிக்கவில்லை. தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்த அவர் படிக்காமல் அமர்ந்து விட்டார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார்.
.jpg)
தனது பேச்சின் முடிவில் ஆளுநர் குறித்து சபாநாயகர் கூறிய கருத்துக்களாலும், தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதாலும் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர். என். ரவி, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்து வெளியேறினார்.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தப் பின்னணியில் இன்று காலை ஆளுநர் ஆர். என். ரவி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் நான்கு நாட்கள் டெல்லியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது முக்கியமாக அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில்தான் டெல்லிக்குச் சென்று திரும்பினார் ஆளுநர். ஒரே மாதத்தில் அவர் 2வது முறையாக டெல்லிக்குச் செல்வது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}