சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படமான கங்குவா படத்துக்கு 14ம் தேதி மட்டும் 9 மணிக்கு சிறப்புக் காட்சியை திரையிட்டுக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. அதேசமயம், அதிகாலைக் காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் கங்குவா. தமிழ் தவிர பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். நாடு முழுவதும் 11,000 திரைகளில் இப்படம் திரையிடப்படவுள்ளது.
இப்படம் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று வெளியாகிறது. இப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு படத் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் கோரியிருந்தது. குறிப்பாக அதிகாலை காட்சியை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அதிகாலை காட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் படக் குழு இருந்தது.
ஆனால் சமீப காலமாக அதிகாலைக் காட்சிகளை தமிழ்நாடு அரசு அனுமதிப்பதில்லை. ரஜினிகாந்த் படத்துக்கே கூட அதிகாலைக் காட்சி அனுமதிக்கப்படவில்லை. விஜய் படத்திற்கும் கூட அதிகாலைக் காட்சிக்கு அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கங்குவா படக் குழுவினர் கண்டிப்பாக அதிகாலை காட்சி கிடைக்கும் என்று நம்பிக்கையாக கூறி வந்தனர். ஆனால் அந்த அனுமதி கிடைக்கவில்லை. வழக்கமாக தரப்படும் திரையீட்டின் முதல் நாளில் கூடுதலாக 9 மணிக்கு ஒரு காட்சியை அனுமதிக்கும் பெர்மிஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை படக் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}