சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படமான கங்குவா படத்துக்கு 14ம் தேதி மட்டும் 9 மணிக்கு சிறப்புக் காட்சியை திரையிட்டுக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. அதேசமயம், அதிகாலைக் காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் கங்குவா. தமிழ் தவிர பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். நாடு முழுவதும் 11,000 திரைகளில் இப்படம் திரையிடப்படவுள்ளது.

இப்படம் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று வெளியாகிறது. இப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு படத் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் கோரியிருந்தது. குறிப்பாக அதிகாலை காட்சியை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அதிகாலை காட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் படக் குழு இருந்தது.
ஆனால் சமீப காலமாக அதிகாலைக் காட்சிகளை தமிழ்நாடு அரசு அனுமதிப்பதில்லை. ரஜினிகாந்த் படத்துக்கே கூட அதிகாலைக் காட்சி அனுமதிக்கப்படவில்லை. விஜய் படத்திற்கும் கூட அதிகாலைக் காட்சிக்கு அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கங்குவா படக் குழுவினர் கண்டிப்பாக அதிகாலை காட்சி கிடைக்கும் என்று நம்பிக்கையாக கூறி வந்தனர். ஆனால் அந்த அனுமதி கிடைக்கவில்லை. வழக்கமாக தரப்படும் திரையீட்டின் முதல் நாளில் கூடுதலாக 9 மணிக்கு ஒரு காட்சியை அனுமதிக்கும் பெர்மிஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை படக் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!
{{comments.comment}}