சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படமான கங்குவா படத்துக்கு 14ம் தேதி மட்டும் 9 மணிக்கு சிறப்புக் காட்சியை திரையிட்டுக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. அதேசமயம், அதிகாலைக் காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் கங்குவா. தமிழ் தவிர பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். நாடு முழுவதும் 11,000 திரைகளில் இப்படம் திரையிடப்படவுள்ளது.

இப்படம் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று வெளியாகிறது. இப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு படத் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் கோரியிருந்தது. குறிப்பாக அதிகாலை காட்சியை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அதிகாலை காட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் படக் குழு இருந்தது.
ஆனால் சமீப காலமாக அதிகாலைக் காட்சிகளை தமிழ்நாடு அரசு அனுமதிப்பதில்லை. ரஜினிகாந்த் படத்துக்கே கூட அதிகாலைக் காட்சி அனுமதிக்கப்படவில்லை. விஜய் படத்திற்கும் கூட அதிகாலைக் காட்சிக்கு அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கங்குவா படக் குழுவினர் கண்டிப்பாக அதிகாலை காட்சி கிடைக்கும் என்று நம்பிக்கையாக கூறி வந்தனர். ஆனால் அந்த அனுமதி கிடைக்கவில்லை. வழக்கமாக தரப்படும் திரையீட்டின் முதல் நாளில் கூடுதலாக 9 மணிக்கு ஒரு காட்சியை அனுமதிக்கும் பெர்மிஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை படக் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
When people come together as one... வெற்றி நமதே!
Clasp the two hands .. இரு கை இணைந்தால்.. எந்தத் தடையும் தகரும்
{{comments.comment}}