சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படமான கங்குவா படத்துக்கு 14ம் தேதி மட்டும் 9 மணிக்கு சிறப்புக் காட்சியை திரையிட்டுக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. அதேசமயம், அதிகாலைக் காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் கங்குவா. தமிழ் தவிர பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். நாடு முழுவதும் 11,000 திரைகளில் இப்படம் திரையிடப்படவுள்ளது.
இப்படம் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று வெளியாகிறது. இப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு படத் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் கோரியிருந்தது. குறிப்பாக அதிகாலை காட்சியை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அதிகாலை காட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் படக் குழு இருந்தது.
ஆனால் சமீப காலமாக அதிகாலைக் காட்சிகளை தமிழ்நாடு அரசு அனுமதிப்பதில்லை. ரஜினிகாந்த் படத்துக்கே கூட அதிகாலைக் காட்சி அனுமதிக்கப்படவில்லை. விஜய் படத்திற்கும் கூட அதிகாலைக் காட்சிக்கு அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கங்குவா படக் குழுவினர் கண்டிப்பாக அதிகாலை காட்சி கிடைக்கும் என்று நம்பிக்கையாக கூறி வந்தனர். ஆனால் அந்த அனுமதி கிடைக்கவில்லை. வழக்கமாக தரப்படும் திரையீட்டின் முதல் நாளில் கூடுதலாக 9 மணிக்கு ஒரு காட்சியை அனுமதிக்கும் பெர்மிஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை படக் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
{{comments.comment}}