- மஞ்சுளா தேவி
சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூபாய் 6000 நிவாரண உதவித் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னை முழுவதும் பல இடங்கள் பாதிக்கப்பட்டது. சென்னை மட்டுமல்லாமல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், மேலும் பல கடலோர மாவட்டங்களிலும், பல பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன.
வெள்ளம் சூழ்ந்து கொண்டதால், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது. வெள்ள நிவாரணப் பணிகள் தொடரந்து நடந்து வருகின்றன. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சென்னை வந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார். அடுத்து மத்திய குழுவும் வரவுள்ளது.

இந்த நிலையில் தற்போது வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தமிழ்நாடு அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. முன்னதாக, வெள்ள பாதிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் சாலைகள், ஏரிகள், உட்கட்டமைப்பு, மனித உயிர்கள் இழப்பு, கால்நடைகள் உயிரிழப்பு, வீடுகளில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நிவாரண உதவிகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன் முக்கிய அம்சங்கள்:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக ரூபாய் 6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும். இவை ரேஷன் கடைகள் மூலமாக அளிக்கப்படும்.
முழுமையாக சேதமடைந்த மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 8500. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம். சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 8000. முழுமையாக சேதமடைந்த நெற் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000.

பல்லாண்டு பயி்கள், மரங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 22,500.. எருது, பசு போன்ற கால்நடை உயிரிழப்புகளுக்கு ரூ. 37,500. வெள்ளாடு, செம்மறி ஆடு போன்றவற்றின் உயிரிழப்புக்கு ரூ. 4000. முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ. 50,000. பகுதி சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ. 15,000. முழுமையாக சேதமடைந்த வல்லங்களுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு மானியத் தொகையாக ரூ. 7.50 லட்சம் வழங்கப்படும். சேதமடைந்த வலைகளுக்கு ரூ. 15,000 வழங்கப்படும்.

புயல் மழையால் இறந்த குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நியாய விலை கடை மூலம் மக்களுக்கு ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
தாத்தா (கவிதை)
{{comments.comment}}