வேற லெவலுக்கு மாறும் மாடி ரயில்.. கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசு.. இனி லாபம்தான்!

May 07, 2023,04:34 PM IST
சென்னை:  தெற்கு ரயில்வேயின் கீழ் வரும் மாஸ் ரேபிட் டிரான்சிஸ் சிஸ்டம் எனப்படும் எம்ஆர்டிஎஸ் ரயில் சேவையை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தப் போகிறது. இதனால் இனி இந்த ரயில் சேவையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாடி ரயில் என்று சென்னை மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த எம்ஆர்டிஎஸ் சேவை சென்னையின் கிழக்குப் பகுதி மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. வேளச்சேரி முதல் பீச் வரையிலான இந்த சேவை சென்னை மக்களுக்கு நீணஅ்ட காலமாக சேவையாற்றி வருகிறது. ஆனால் இதுவரை இது லாபம் சம்பாதிக்கவே இல்லை. ஆண்டுக்கு ஆண்டு நஷ்டம்தான் அதிகரித்து வருகிறது.

இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணமே ரூ. 5தான். மேலும் பெரியஅளவில் கூட்டமும் வருவதில்லை. இதனால் இந்த ரயில் சேவை தொடர்ந்து நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது.  கடந்த ஆண்டு மட்டும் ரூ. 84.10 கோடி நஷ்டத்தை இது சந்தித்தது. இதன் காரணமாக ரயில் நிலையங்களைப் பராமரிப்பது , ரயில் பெட்டிகளைப் பராமரிப்பது போன்றவை சிரமத்தில் உள்ளன.




இதையடுத்து இந்த ரயில்சேவையை தமிழ்நாடு அரசு வாங்கி தானே நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச கட்டணத்தையும் ரூ. 10 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளையும் மாற்றவும், ரயில் நிலையங்களை நவீனமாக்கவும்  திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தையும், கூடவே வருமானத்தையும் ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே தற்போது ஆண்டுக்கு ரூ. 100 கோடியை பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவற்றுக்காக செலவிட்டு வருகிறது. ஆனால் டிக்கெட் கட்டணம் சரிவர இல்லை. கடந்த ஆண்டு டிக்கெட் கட்டணம் வெறும் ரூ. 17.25 கோடிதான். 

இதனால் இந்த ரயில்சேவையை முழுமையாக மாநில அரசே எடுத்து நடத்தத் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை எப்படி சிறப்பாக நடைபெறுகிறதோ அதேபோல இந்த எம்ஆர்டிஎஸ் சேவையையும் மாற்றும் திட்டத்தில்  தமிழ்நாடு அரசு உள்ளது. ரூ. 500 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு இந்த சேவையை ரயில்வேயிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறும் என்று தெரிகிறது.



இதை இரு கட்டமாக செயல்படுத்த முன்னதாக திட்டமிடப்பட்டது. அதாவது ரயில் நிலையங்களை வர்த்தக ரீதியாக லாபகரமாக  மாற்றும் பணியை முதலில் சிஎம்டிஏ செய்யும். ரயில்களை இயக்குவது, பராமரிப்பதை ரயில்வே பார்த்துக் கொள்ளும். அடுத்த கட்டமாக மொத்தமாக ரயில்கள் உள்ளிட்டவற்றை சிஎம்டிஏ கையகப்படுத்தும்.  ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்தத் திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. விரைவில் இதுதொடர்பான முடிவுகள்  எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

May 1: உலக உழைப்பாளர் தினம்.. முயற்சியே வெல்லும்!

news

Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!

news

RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

news

ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)

news

May Day: தொழிலாளர் தினம்.. உழைப்பில்லாமல் கிடைப்பது நிலைத்திருப்பது இல்லை!

news

Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்