சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இணையம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ஊபர், ஓலா, சொமாட்டோ, ஸ்விக்கி போன்ற இணையம் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.
இது போன்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு, விபத்து காப்புறுதி, சுகாதார காப்புறுதி போன்றவை இல்லை. இந்த நிலையில் அமைப்பு சாராக் தொழிலாளர்களின் நலனுக்காக தனி நல வாரியம் அமைக்கப்படும் என சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஊபர், ஓலா,டொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்தநிலையில், தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து இன்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இணைய செயலிகள் வாயிலாக இயங்கும் வாடகை, வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளிலும் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு என தனி நல வாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் "தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியம்" எனும் புதிய நலவாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்
எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறை ஊழியர்கள் தபால் ஓட்டு போடலாம்
கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி கூட்டணி விவகாரம்...டில்லியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை
ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
{{comments.comment}}