சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இணையம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ஊபர், ஓலா, சொமாட்டோ, ஸ்விக்கி போன்ற இணையம் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.
இது போன்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு, விபத்து காப்புறுதி, சுகாதார காப்புறுதி போன்றவை இல்லை. இந்த நிலையில் அமைப்பு சாராக் தொழிலாளர்களின் நலனுக்காக தனி நல வாரியம் அமைக்கப்படும் என சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஊபர், ஓலா,டொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்தநிலையில், தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து இன்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இணைய செயலிகள் வாயிலாக இயங்கும் வாடகை, வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளிலும் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு என தனி நல வாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் "தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியம்" எனும் புதிய நலவாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}