எருமை மாடா நீ... உதவியாளரிடம் சீறிய அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம்.. தஞ்சையில் சர்ச்சை

Jan 03, 2025,05:00 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தன் உதவியாளரை  எருமை மாடா நீ என்று ஒருமையில் திட்டிய விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.


தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா, எம்பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




இந்த நிகழ்ச்சியை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேச துவங்கிய அவர், அனைவருக்கும் வணக்கம் கூறி உரையை தொடங்கனார். அப்போது திரும்பி உதவியாளரை தேடிய அவர், மைக்கை ஆனில் வைத்துக்கொண்டே எங்கயா அவன், பரசுராமன் எங்கேயா. (அப்போது உதவியாளர் வேகமாக வந்தார்) எருமை மாடா டா நீ. பேப்பர் எங்கே என்றார். உடனே உதவியாளர் பேப்பரை கொடுக்க, அதனை வாங்கிய அவர், உடனே கீழே வீசி விட்டார்.


இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மேடையில் பலர் முன்னிலையில் அமைச்சர் தனது உதவியாளரிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்ததுடன். விழாவில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அத்துடன் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பரவி அமைச்சருக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!

news

3வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

கல்யாணமாகி 45 நாள்தான் ஆச்சு.. கணவர் கதையை முடித்த மனைவி.. காரணம் மாமா!

news

SORRY’மா... 'மாண்புமிகு' சொல்லல்ல செயல்.. முதல்வர் குறித்து டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சி டிவீட்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 03, 2025... இன்று இவங்களுக்கு தான் மகிழ்ச்சியான நாள்

news

சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!

news

இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!

news

திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்

அதிகம் பார்க்கும் செய்திகள்