தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தன் உதவியாளரை எருமை மாடா நீ என்று ஒருமையில் திட்டிய விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா, எம்பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேச துவங்கிய அவர், அனைவருக்கும் வணக்கம் கூறி உரையை தொடங்கனார். அப்போது திரும்பி உதவியாளரை தேடிய அவர், மைக்கை ஆனில் வைத்துக்கொண்டே எங்கயா அவன், பரசுராமன் எங்கேயா. (அப்போது உதவியாளர் வேகமாக வந்தார்) எருமை மாடா டா நீ. பேப்பர் எங்கே என்றார். உடனே உதவியாளர் பேப்பரை கொடுக்க, அதனை வாங்கிய அவர், உடனே கீழே வீசி விட்டார்.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மேடையில் பலர் முன்னிலையில் அமைச்சர் தனது உதவியாளரிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்ததுடன். விழாவில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அத்துடன் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பரவி அமைச்சருக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!
ஆபரேஷன் சிந்தூர் அதிரடி எதிரொலி.. பாதுகாப்புத்துறை பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு
ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்கம்
இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Maman movie: ஏண்டா தம்பிகளா, மண் சோறு சாப்பிட்டா எப்படிடா படம் ஓடும்.. நடிகர் சூரி ஆதங்கம்!
நிதி ஆயோக் கூட்டம்: மே 24 முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்!
ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கிறேன்.. இப்படியே இருக்கப் போறேன்.. அண்ணாமலை
தமிழகத்தில்.. பள்ளிகள் திறப்பு எப்போது..? தேதி அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
{{comments.comment}}