தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தன் உதவியாளரை எருமை மாடா நீ என்று ஒருமையில் திட்டிய விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா, எம்பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேச துவங்கிய அவர், அனைவருக்கும் வணக்கம் கூறி உரையை தொடங்கனார். அப்போது திரும்பி உதவியாளரை தேடிய அவர், மைக்கை ஆனில் வைத்துக்கொண்டே எங்கயா அவன், பரசுராமன் எங்கேயா. (அப்போது உதவியாளர் வேகமாக வந்தார்) எருமை மாடா டா நீ. பேப்பர் எங்கே என்றார். உடனே உதவியாளர் பேப்பரை கொடுக்க, அதனை வாங்கிய அவர், உடனே கீழே வீசி விட்டார்.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மேடையில் பலர் முன்னிலையில் அமைச்சர் தனது உதவியாளரிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்ததுடன். விழாவில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அத்துடன் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பரவி அமைச்சருக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!
{{comments.comment}}