தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தன் உதவியாளரை எருமை மாடா நீ என்று ஒருமையில் திட்டிய விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா, எம்பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேச துவங்கிய அவர், அனைவருக்கும் வணக்கம் கூறி உரையை தொடங்கனார். அப்போது திரும்பி உதவியாளரை தேடிய அவர், மைக்கை ஆனில் வைத்துக்கொண்டே எங்கயா அவன், பரசுராமன் எங்கேயா. (அப்போது உதவியாளர் வேகமாக வந்தார்) எருமை மாடா டா நீ. பேப்பர் எங்கே என்றார். உடனே உதவியாளர் பேப்பரை கொடுக்க, அதனை வாங்கிய அவர், உடனே கீழே வீசி விட்டார்.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மேடையில் பலர் முன்னிலையில் அமைச்சர் தனது உதவியாளரிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்ததுடன். விழாவில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அத்துடன் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பரவி அமைச்சருக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}