சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ பதவியில் 1299 காலிப் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடை பணியாளர் தேர்வு வாரியம். இதற்கு இணையம் வழியாக விண்ணப்பம் ஏப்ரல் 7 தேதி தொடங்கி மே 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்கிய அன்றே நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதற்கு மறுநாளான 15-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் பெண்கள் பெயரில் 10 லட்சம் வரை அசையா சொத்துக்கள் பதிவு செய்தால் பதிவு கட்டணம் ஒரு சதவிகிதம் குறைக்கப்படும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம், உயர் கல்வி திட்டங்கள், 40,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் போன்றவை பல்வேறு திட்டங்கள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 40,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.
அதன்படி தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்கள், அரசு பள்ளிகளில் சத்துணவு உதவியாளர் பணி, தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப்பணியிடங்கள் என ஒவ்வொரு துறையிலுள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடை பணியாளர் தேர்வு வாரியம்.
காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களில் சீருடை சேவைக்கான பணியாளர்களை தேர்வு செய்ய சீருடை பணியாளர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. இதில் தாலுக்காவில் 933 (ஆண்-654, பெண்- 279) மற்றும் ஆயுதப்படையில் 366 ( ஆண்-255, பெண்- 111 என மொத்தம் 1299 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களில் மொத்தம் 1299 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.
இதற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே 3 தேதியுடன் நிறைவடைகிறது.
மொத்தம் 1299 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசு பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வகுப்பு பிரிவில் வயது வரம்பிற்கு தளர்வு உண்டு.
இந்தப் பணியிடங்களுக்கு ஊதியம் ரூபாய் ரூ.36, 900 முதல் ரூ 1,16,600 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife
கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!
சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்
4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு
{{comments.comment}}