சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த பாரத் ஸ்கவுட் அண்ட் கைட் நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி கலந்து கொண்டு ஜொலித்துள்ளார்.
பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா ஆண்டின் நிறைவு விழா உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நவம்பர் 23 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் நாடு முழுவதுமிருந்து ஏராளமான சாரண சாரணிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்களில் சின்ன தாராபுரம் ஆர்.என். மெட்ரிக் பள்ளியைச் சேரந்த 8 சாரணியர்கள் மற்றும் ஆசிரியை ஆகியோரும் அடங்குவர். இதில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ச.ச.கவிஸ்ரீயும் கலந்து கொண்டு பல்வேறு சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்று அசத்தினார்.
ச.ச.கவிஸ்ரீ உள்ளிட்ட 8 சாரணியர்களுக்கும், ஆசிரியைக்கும் பள்ளியின் செயலாளர்,ஆர். என். பாபு, பொருளாளர்,பி.தியாகராஜன், முதல்வர். டாக்டர்.ஆர்.ராமசாமி மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மாணவி கவிஸ்ரீயின் பாட்டி க.பிரேமா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் நடத்தும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}