சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த பாரத் ஸ்கவுட் அண்ட் கைட் நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி கலந்து கொண்டு ஜொலித்துள்ளார்.
பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா ஆண்டின் நிறைவு விழா உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நவம்பர் 23 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் நாடு முழுவதுமிருந்து ஏராளமான சாரண சாரணிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்களில் சின்ன தாராபுரம் ஆர்.என். மெட்ரிக் பள்ளியைச் சேரந்த 8 சாரணியர்கள் மற்றும் ஆசிரியை ஆகியோரும் அடங்குவர். இதில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ச.ச.கவிஸ்ரீயும் கலந்து கொண்டு பல்வேறு சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்று அசத்தினார்.
ச.ச.கவிஸ்ரீ உள்ளிட்ட 8 சாரணியர்களுக்கும், ஆசிரியைக்கும் பள்ளியின் செயலாளர்,ஆர். என். பாபு, பொருளாளர்,பி.தியாகராஜன், முதல்வர். டாக்டர்.ஆர்.ராமசாமி மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மாணவி கவிஸ்ரீயின் பாட்டி க.பிரேமா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் நடத்தும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}