சென்னை: தமிழ்நாட்டில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை வெயில் வெளுத்தெடுத்து வரும் நிலையில் வருகிற 25ம் தேதி முதல் 5 நாட்களுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சிச் செய்தியைச் சொல்லியுள்ளது.
தமிழ்நாட்டில் படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது. எல்லாப் பகுதிகளிலும் நல்ல வெயில் அடித்துக் கொண்டுள்ளது. மேலும் இயல்பை விட கூடுதலாக 2 முதல் 3 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரித்தும் காணப்படுகிறது. மாசி மாதத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்திருப்பதால் பங்குனியை நினைத்து இப்போதே மக்கள் பதட்டமாக ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளது. அதன்படி 25ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது பொதுவாக வறண்ட வானிலையே நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூரில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வெளுத்துள்ளது.
அடுத்த 2 நாட்களில் வெப்ப நிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. அதேசமயம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை வெப்ப நிலையில் சற்று தளர்வு காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
{{comments.comment}}