வெயிலைப் பார்த்து கண்ணு பூத்துப் போச்சா.. 25ம் தேதி முதல் மழை பெய்யப் போகுதாம்.. Ready to wet!

Feb 23, 2025,03:24 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை வெயில் வெளுத்தெடுத்து வரும் நிலையில் வருகிற 25ம் தேதி முதல் 5 நாட்களுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சிச் செய்தியைச் சொல்லியுள்ளது.


தமிழ்நாட்டில் படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது. எல்லாப் பகுதிகளிலும் நல்ல வெயில் அடித்துக் கொண்டுள்ளது. மேலும் இயல்பை விட கூடுதலாக 2 முதல் 3 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரித்தும் காணப்படுகிறது. மாசி மாதத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்திருப்பதால் பங்குனியை நினைத்து இப்போதே மக்கள் பதட்டமாக ஆரம்பித்துள்ளனர்.




இந்த நிலையில் தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளது. அதன்படி 25ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தமிழ்நாட்டில் தற்போது பொதுவாக வறண்ட வானிலையே நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூரில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வெளுத்துள்ளது.


அடுத்த 2 நாட்களில்  வெப்ப நிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. அதேசமயம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை வெப்ப நிலையில் சற்று தளர்வு காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்