சென்னை: தமிழ்நாட்டில் மே 17 வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் மக்கள் பலரும் புலம்பி தவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து சற்று குளுமை நிலவி வருகிறது. மேலும் பகல் நேரங்களில் வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் சிலு சிலு என்ற காற்றும் அடிப்பதால், நல்ல காலநிலை நிலவுகிறது. இதனால் இரவு நேரங்களில் புழுக்கம் இல்லாமல் நல்ல தூக்கம் வருகிறது. தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருவதால் மக்கள் குஷியில் உள்ளனர்.
இந்த நிலையில் குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மே 17 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை:
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, ஆகிய ஏழு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள்:
திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 16:
நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக குறையும் என அறிவித்துள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}