சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து நாட்கள் அதிக மழை தொடரும் என்பதால் கூடவே ரெயின் கோட்டை எடுத்துச் செல்லுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
மேலும் சென்னையில் வெயில் இன்று சுட்டெரித்தாலும் விரைவில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக கன முதல் மிக கனமழை கொட்டி தீர்த்ததுள்ளது. பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதையும் காண முடிந்தது.

அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாட்டு மக்களுக்கு குட் நியூஸ் கொடுத்துள்ளார்.
அதில், குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி தமிழ்நாட்டு கடல் பகுதிகளிலும் நெருங்கி வருகிறது. அதனால் இதுவரை பார்த்த மழை எல்லாம் சும்மா ட்ரெய்லர் தான். இனி தான் தமிழ்நாட்டில் மழையின் ஆட்டம் தீவிரமாகப் போகிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை அதிகரிக்கும். அதனால் வெளியே செல்லும்போது கூடவே ரெயின் கோட்டையும் எடுத்துச் செல்லுங்கள்.
சென்னையில் தற்போது நிலவும் வெயில் காலநிலை மாறி, நல்ல சாதகமான சூழ்நிலை அமையும்.அதேபோல் சென்னையில் இன்று வெயில் சுட்டரித்தாலும் விரைவில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் சொன்னது போலவே சென்னையில் தற்போது வானம் மூடிக் கொண்டு வருகிறது. எல்லாம் நல்லபடியாக நடந்தால் செமத்தியான மழையை சென்னை மக்கள் அனுபவிக்கலாம்.
Short Story: ஊன்றுகோல்!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
குழந்தை
புதுவருட டைரி!
{{comments.comment}}