அதிரடி காட்டும் தங்கம் விலை...அதிர்ச்சியில் மக்கள்...ஒரே நாளில் ரூ.1280 உயர்வு

Jan 05, 2026,04:47 PM IST

சென்னை: புத்தாண்டின் தொடக்கத்தில் சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,920 வரை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து ரூ.1280 உயர்ந்துள்ளது.


இன்றைய விலை நிலவரம் (ஜனவரி 5, 2026):




சென்னையில் இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில், ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 12,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 640 அதிகரித்து, வரலாறு காணாத வகையில் ரூ. 1,01,440-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் தூய தங்கத்தின் (24 கேரட்) விலை கிராமுக்கு ரூ. 87 உயர்ந்து ரூ. 13,833-ஆகவும், ஒரு சவரன் ரூ. 1,10,664-ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 8 அதிகரித்து ரூ. 265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


காலையில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் மீண்டும் ரூ.640 உயர்ந்தது. ஒரே நாளில் இருமுறை உயர்ந்து இன்று மட்டும் ரூ.1280 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ.12,760 க்கும், ஒரு சவரன் ரூ.1,02,080 க்கும் விற்பனையாகிறது.ஒரே நாளில் இந்த அளவிற்கு அதிரடியாக உயர்ந்துள்ள தங்கம் விலை வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


விலை உயர்வுக்கான காரணங்கள்:


சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களே இந்த திடீர் உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையேயான மோதல் போக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் உள்நாட்டு தங்க விலையை நேரடியாகப் பாதிக்கின்றன. 


அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை இருப்பு வைப்பதும் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் தங்கம் ஒரு புதிய முதலீட்டு சாதனையாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புத்தாண்டு சலுகைகள் மற்றும் திருமண சீசன் நெருங்கி வரும் வேளையில், இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரைத் திகைக்க வைத்துள்ளது. இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்பதால், டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்